என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscation of rice"

    • ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தில் ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிஷிவந்தியம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார் கோபி, பாலாஜி, இளையபெருமாள் ஆகியோர் காட்டுஎடையார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மினி லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் வடதொரசலூரை சேர்ந்த மணிகண்டன்(31) என்பதும் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளியூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண் டனை கைது செய்த போலீசார் , மினி லாரியுடன் ரேசன் அரிசி மூட்டைகளை ைகப்பற்றினர். பின்னர் அவை விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    • ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பறக்கும் படை தாசில்தார் ராஜேஸ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் சங்ககிரி ரெயில் நிலையத்தில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    சேலம்:

    சங்ககிரியில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தாசில்தார் ராஜேஸ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் சங்ககிரி ரெயில் நிலையத்தில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது ரெயில் நிலைய நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 700 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அதை கடத்த முயன்றவர்கள் குறித்து அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×