search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி சிறை பிடிப்பு"

    • கழிவுகளை கொட்ட கூடாது என்று பேரூராட்சி நிர்வாகத்தால் அறிப்பு பலகை வைக்கப்பட்டது.
    • அதனையும் மீறி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொது மக்கள் சிறை பிடித்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட செம்புளிச் சாம்பாளையம் பகுதியில் கழிவுகளை கொ ட்ட கூடாது என்று பேரூரா ட்சி நிர்வாகத்தால் கடந்த மாதம் அறிப்பு பலகை வைக்கப்பட்டது.

    அவ்வாறு கொட்ட வரும் வாகனத்தின் மீதும், வாகனத்தின் உரிமை யாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என்று பேரூரா ட்சி நிர்வா கத்தின் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்ப ட்டிருந்தது.

    அதனையும் மீறி அந்தபகு திக்கு வந்த கழிவுக ளை ஏற்றி வந்த லாரியை பொது மக்கள் சிறை பிடித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கவிதா, நில வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் சம்பந்தப்பட்ட நார் தொழிற்சாலை நடத்து வரிடத்தில் பேச்சுவார்த்தை செய்து இனி இதுபோல் கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்ததை அடு த்து அங்கிருந்து பொதும க்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் செம்புளி ச்சாம்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள்,மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி நேற்று முன்தினம் அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக ரூ.2,04,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஊஞ்சபாளையம் பகுதியில் நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதி க்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக அந்த லாரிகளுக்கு ரூ.1,34,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் வரை, லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • தொடர்ந்து லாரி ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த சேதுபதி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் ஈங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குளம் குளத்தோட்டம் என்ற இடத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இந்த இடத்தில் அப்பகுதியில் சிறிய டேங்கர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் லாரி டிரைவர் எங்கோ சேகரித்த கழிப்பறை கழிவுகளை சாலையோரம் கொட்டுவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    இதையடுத்து அந்த டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை ஓரத்தில் கழிப்பறை கழிவுகளை கொட்டிய லாரியினை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

    தொடர்ந்து லாரி ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த சேதுபதி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×