என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரொனால்டோ"
- பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.
- மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை.
போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார்.
பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.
தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.
அதுதொடர்பாக பேட்டியளித்த "அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.
இவ்வாறு மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார். அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்துள்ளது. மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.
- ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு லாஸ் வேகாஸ் நகர கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
- அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் மேயோர்க்கா என்பவர் ரொனால்டோவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2009ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் மேயோர்கா என்பவர், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ லாஸ்வேகாஸ் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் இதனை ரொனால்டோ மறுத்து வந்தார்.
இந்த வழக்கு லாஸ் வேகாஸ் நகர கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரொனால்டோவுக்கு எதிரான சாட்சியங்கள் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்,
நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.
2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும். இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. தற்போது கால்பந்து உலகில் நட்சத்திர வீரர்களாக மெஸ்சி (அர்ஜென்டினா), ரொனால்டோ (போர்ச்சுக்கல்) வலம் வருகிறார்கள்.
அவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்கும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் கிளப் அணிக்கும் விளையாடி வருகிறார்கள்.
இந்த இரு அணிகளும் மோதும்போது மெஸ்சி- ரொனால்டோ இருவருக்கும் இடையே நேரடி போட்டியாகவே கருதப்படும். அந்த அளவுக்கு இருவரும் களத்தில் நேருக்கு நேர் மல்லு கட்டுவார்கள்.
உலக கோப்பையில் இன்று நடக்கும் ஆட்டங்களில் இருவரும் களம் இறங்குகிறார்கள். மெஸ்சி பிரான்சு அணிக்கு எதிராகவும், ரொனால்டோ உருகுவே அணிக்கு எதிராகவும் விளையாடுகிறார்கள். இதில் தங்களது அணியை வெற்றி பெற வைத்து கால் இறுதிக்கு அழைத்து செல்வது மெஸ்சியா, ரொனால்டோவா? என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நிலவுகிறது.
இருவருமே தங்களது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜொலிக்க வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இன்றைய போட்டியில் அர்ஜென்டினா- போர்ச் சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் கால் இறுதி யில் இவ்விரு அணிகளும் மோதும் வாய்ப்பு ஏற்படும்.
ஆனால் இருவரும் இன்று களம் இறங்கி எதிராக விளையாடும் அணிகள் பலம் பொருந்தியதாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
மெஸ்சி மற்றும் ரொனால்டோ விளையாடும் போட்டி என்பதால் இது மிகவும் முக்கியமான ஆட்டங்களாக கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்றால் காலிறுதியில் போர்ச்சுக்கல் - அர்ஜெண்டினா அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அனைவரும் இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் உள்ளனர். #worldcup2018 #LionelMessi #Ronaldo
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்