என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில் முன் பாய்ந்து தற்கொலை"
கோவை:
கோவை காரமடை அருகே உள்ள கண்ணார் பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ஏஞ்சல் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இவரும் வடவள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த 4 வருடமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். காதல் விவகாரம் குறித்து 2 பேரும் தங்களது பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்கும்படி கூறினர். அவர்கள் திருமணம் செய்து வைக்க காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்தநிலையில் காதலர்கள் 2 பேரும் நண்பர்கள் உதவியுடன் கணபதியில் உள்ள கோவிலில் வைத்து நேற்று திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
அதன்படி காதலர்கள் கணபதி டெக்ஸ்டுல்ஸ் பாலம் அருகே உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் நேற்று முன்தினம் தங்கினர்.
காலையில் திருமணம் செய்ய இருந்த நிலையில் நள்ளிரவு திடீரென ஏஞ்சல் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது காதலன் அவரை பல இடங்களில் தேடினார். ஆனால் ஏஞ்சல் கிடைக்க வில்லை. இந்த நிலையில் டெக்ஸ்டூல்ஸ் பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது. உடனடியாக அந்த வாலிபர் அங்கு சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடந்தது ஏஞ்சல் என்பது தெரியவந்தது. அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஏசு வழக்குப்பதிவு செய்து திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்