search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nurse suicide"

    பாவூர்சத்திரம் அருகே நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள வேட்டைக்காரன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பூதப்பாண்டி. இவரது மகள் சங்கரகோமதி (வயது21). இவர் தென்காசியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ‘நர்ஸ்’ ஆக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர கோமதியின் தங்கை ஒரு வாலிபரை காதலித்து, காதல் திருமணம் செய்தார். அக்காள் இருக்கும் போது தங்கை காதல் திருமணம் செய்யலாமா என்று அவரது குடும்பத்தினர் காதல் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் காதல் திருமணம் செய்த இளைய மகளை வீட்டுக்கு வரக்கூடாது என்று பெற்றோர் தடை விதித்தனர். அந்த தங்கை மீது சங்கர கோமதி அதிக பாசம் வைத்து இருந்தாராம். இதனால் அவர் உடனடியாக தங்கையை வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறி வந்தார்.

    இதனால் அவரது பெற்றோர் சங்கர கோமதிக்கு விரைவில் வரன் பார்த்து திருமணம் செய்து முடித்த பிறகு தங்கையை வீட்டுக்கு அழைக்கலாம் என்று கூறினர். இதைத்தொடர்ந்து சங்கர கோமதிக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் உடனடியாக எந்த மாப்பிள்ளையும் அமையவில்லை. சில மாதங்கள் கடந்ததால் மனம் உடைந்த சங்கர கோமதி கடந்த 16-ந்தேதி வி‌ஷம் குடித்தார்.

    அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு சங்கர கோமதி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே பூச்சி மருந்து குடித்து நர்சு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகேயுள்ள ரெட்டி வலசை பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் நந்தினி (வயது21). இவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறைக்காக ஊருந்து வந்து இருந்த நந்தினிக்கு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் பூச்சி மருந்தை குடித்தார்.

    இதனை பார்த்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக நந்தினி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரமடை அருகே திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை காரமடை அருகே உள்ள கண்ணார் பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ஏஞ்சல் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இவரும் வடவள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த 4 வருடமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். காதல் விவகாரம் குறித்து 2 பேரும் தங்களது பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்கும்படி கூறினர். அவர்கள் திருமணம் செய்து வைக்க காலம் தாழ்த்தி வந்தனர்.

    இந்தநிலையில் காதலர்கள் 2 பேரும் நண்பர்கள் உதவியுடன் கணபதியில் உள்ள கோவிலில் வைத்து நேற்று திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி காதலர்கள் கணபதி டெக்ஸ்டுல்ஸ் பாலம் அருகே உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் நேற்று முன்தினம் தங்கினர்.

    காலையில் திருமணம் செய்ய இருந்த நிலையில் நள்ளிரவு திடீரென ஏஞ்சல் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது காதலன் அவரை பல இடங்களில் தேடினார். ஆனால் ஏஞ்சல் கிடைக்க வில்லை. இந்த நிலையில் டெக்ஸ்டூல்ஸ் பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது. உடனடியாக அந்த வாலிபர் அங்கு சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடந்தது ஏஞ்சல் என்பது தெரியவந்தது. அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஏசு வழக்குப்பதிவு செய்து திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை மாவட்டம் காரமடை அருகே குடும்ப தகராறில் நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி குடியிருப்பை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி வித்யா (வயது 26). இவர் காரமடை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    சம்பவத்தன்று வித்யாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த வித்யா வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரமடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திவ்யா கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று திவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாக 1½ வருடத்தில் திவ்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    நாகர்கோவிலில் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    திருவட்டாரை அடுத்த வியனூரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகள் அனுஷா (வயது 20). நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கண் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

    அனுஷா, ஆஸ்பத்திரி விடுதியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். நேற்று மாலை திடீரென ஆஸ்பத்திரியின் 3-வது மாடிக்கு சென்ற அனுஷா, அங்கிருந்து திடீரென கீழே குதித்தார். தலையில் பலத்த அடிபட்ட அவரை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அனுஷா பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அனுஷாவின் உடலை கைப்பற்றி ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுஷாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    அனுஷா தற்கொலை செய்த தகவல் அவரது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அனுஷாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    அனுஷாவின் தற்கொலை குறித்து அவரது தந்தை நல்லதம்பி, நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    அனுஷாவின் சாவில் சந்தேகம் இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு அனுஷா என்னுடன் செல்போனில் பேசினார். அப்போது விடுதி அறையில் நர்சு ஒருவரின் நகை திருடு போனதாகவும், அது தொடர்பாக தன்னிடம் விசாரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

    நகை திருட்டு குறித்து அனுஷாவிடம் விசாரிக்கப்பட்டதால் அவர், மனம் உடைந்து விட்டார். இனி ஊருக்கு வர மாட்டேன் என்றும் கூறினார். இதன் காரணமாக அவர் இறந்தாரா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.

    நல்லதம்பி புகார் குறித்து போலீசார் விடுதியில் விசாரணை நடத்தினர். அனுஷாவுடன் தங்கியிருந்த நர்சுகளிடமும் விவரம் சேகரிக்கப்பட்டது. அப்போது அனுஷா, அடிக்கடி செல்போனில் பேசுவதும், இதற்காக ஆஸ்பத்திரி நிர்வாகம் அவரை கண்டித்ததும் தெரிய வந்தது.

    அனுஷா தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை செல்போனில் பேசிக் கொண்டிருந்த தகவலும் போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அனுஷாவின் செல்போனை கைப்பற்றினர். அதில், அனுஷா யாருடன் அடிக்கடி பேசினார், இறப்பதற்கு முன்பு யாருடன் பேசிக் கொண்டிருந்தார் என்பது போன்ற விவரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    அனுஷாவுக்கு காதல் பிரச்சினை இருந்ததா? இதன் காரணமாக தொல்லைகளுக்கு ஆளானாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, அனுஷா தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். 3 கோணங்களில் விசாரணை நடக்கிறது. விரைவில் உண்மை காரணம் தெரிய வரும். அனுஷாவை யாரும் தற்கொலைக்கு தூண்டினார்களா? என்பதையும் கண்டறிவோம். யார் தவறு செய்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    கோவையில் கருகலைந்த மனவேதனையில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் மாலினி (வயது 19). இவர் பீளமேடு அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்துக்கொண்டே நர்சிங் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அறையில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மாலினியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவரது மனைவி பிரேமா (24). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கர்ப்பிணியாக இருந்த பிரேமாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கரு கலைந்தது. இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். மேலும் வயிறு வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரேமா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட பிரேமாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×