search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு"

    • தண்டவாளத்தை கடந்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு மிஷின் காம்பவுண்ட் அசோக் நகரை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (வயது 48). தொழிலாளி.

    இந்த நிலையில் முரளி கிருஷ்ணன் இன்று காலை வீட்டில் இருந்து குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்றார்.

    அப்போது அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த திருப்பதி பாசஞ்சர் ரெயில் இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முரளி கிருஷ்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் முரளி கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிநீர் எடுத்து வர சென்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள், குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • தொழிலாளி ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகில் உள்ள சிங்காரகோட்டையை சேர்ந்தவர் பூமிநாதன்(52). கூலித்தொழிலாளி. இவர் வடமதுரை அருகில் உள்ள புதூர் பகுதிக்கு தனது மகள் வீட்டிற்கு வந்திருந்தார். இன்று காலை ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×