search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் எடுத்து வர சென்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு சாவு
    X

    கோப்புப்படம்

    குடிநீர் எடுத்து வர சென்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு சாவு

    • தண்டவாளத்தை கடந்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு மிஷின் காம்பவுண்ட் அசோக் நகரை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (வயது 48). தொழிலாளி.

    இந்த நிலையில் முரளி கிருஷ்ணன் இன்று காலை வீட்டில் இருந்து குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்றார்.

    அப்போது அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த திருப்பதி பாசஞ்சர் ரெயில் இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முரளி கிருஷ்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் முரளி கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிநீர் எடுத்து வர சென்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள், குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×