search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராதாபுரம் கால்வாய்"

    • குமரியில் கடைமடை பகுதிக்கு நீர் செல்லாத நிலையில் இருக்கிறது
    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அறிவிப்பு

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் கன்னிப் பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டு 15 நாட்கள் கடந்த பின்பும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. அணை திறப்பதற்கு முன்பாகவே கால்வாய்களை தூர்வார வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும், கால்வாய்கள் தூர்வாரப்பட வில்லை. மேலும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றால் பயிர்கள் கருகும் நிலை ஏற்படும். மேலும் பழையாற்றின் கரையிலுள்ள மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு இருக்கின்றன.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் கால்வாய்களை தூர்வாருவதற்கு ரூ.5 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடுகள் இருக்கிறதே தவிர நிலையான தீர்வு காணப்படவில்லை. இதனால் இயற்கை செல்வங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. தண்ணீர் கடைமடைக்கு செல்லாததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகி பயிரிட முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்ட அணைகளிலிருந்து ராதாபுரம் கால்வாயில் கடந்த 16-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை தினசரி வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு ஆணையிட்டு, அழகப்பபுரம் அருகே உள்ள திலநகர் ஊரில் இருந்து பிரிந்து செல்லும் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடைமடைகளுக்கு தண்ணீர் செல்லாத நிலையில், இருக்கின்ற தண்ணீரை ராதாபுரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. எனவே குமரி மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கடைமடைகளுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் தண்ணீர் கிடைப்பதற்கு கால்வாய்களை முறையாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி இதுபோன்ற உரிய நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் செல்லவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்தையும் சரி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நலனை பாதுகாக்க இதனை கண்டித்து நாகர்கோவில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள், கட்சி நிர்வா கிகள் பலர் கலந்து கொள் கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையால் 4½ மாதங்கள் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்த ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஞ்சுகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார கடைவரம்பு பகுதி களில் உள்ள விளை நிலங்க ளுக்கு தண்ணீர் கிடைக்கா மல் உள்ளது. ஆனால், தோவாளை கால்வாயில் இருந்து கடைவரம்பு நிலங்களுக்கு செல்லும் மடையினை அடைத்து முழுவதுமாக ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. குமரி விவசாயி கள் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிரானவர்கள் அல்ல. கடந்த காலங்களில் தண்ணீரின் இருப்பை பொருத்து 15 முதல் 30 நாட்கள் மட்டும் ராதாபுரம் கால் வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    தற்போது பிறப்பிக்கப்பட் டுள்ள அரசாணையால் 4½ மாதங்கள் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண் ணீர் திறந்துவிட வேண்டியுள் ளது. அரசாணையின்படி தண்ணீர் திறந்து விடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அதேநேரத் தில்நிர்ணயித்த அளவை விட கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால், குமரி மாவட்டத்தில் உள்ள 79 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யும் விவசாயி கள் பெரும் துயரத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி சம்பந்தப்பட்டதுறை அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×