search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் கால்வாய்க்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. 

    ராதாபுரம் கால்வாய்க்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையால் 4½ மாதங்கள் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்த ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஞ்சுகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார கடைவரம்பு பகுதி களில் உள்ள விளை நிலங்க ளுக்கு தண்ணீர் கிடைக்கா மல் உள்ளது. ஆனால், தோவாளை கால்வாயில் இருந்து கடைவரம்பு நிலங்களுக்கு செல்லும் மடையினை அடைத்து முழுவதுமாக ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. குமரி விவசாயி கள் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிரானவர்கள் அல்ல. கடந்த காலங்களில் தண்ணீரின் இருப்பை பொருத்து 15 முதல் 30 நாட்கள் மட்டும் ராதாபுரம் கால் வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    தற்போது பிறப்பிக்கப்பட் டுள்ள அரசாணையால் 4½ மாதங்கள் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண் ணீர் திறந்துவிட வேண்டியுள் ளது. அரசாணையின்படி தண்ணீர் திறந்து விடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அதேநேரத் தில்நிர்ணயித்த அளவை விட கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால், குமரி மாவட்டத்தில் உள்ள 79 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யும் விவசாயி கள் பெரும் துயரத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி சம்பந்தப்பட்டதுறை அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×