search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ் காந்தி கொலை வழக்கு"

    • நளினி விடுதலை தொடர்பான மனுவை இன்று சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
    • நளினி விடுதலை மனுவை தள்ளுபடி செய்த நிலையில் முருகனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி தற்போது பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

    15 நாட்களுக்கு ஒரு முறை இருவரும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வேலூர் ஜெயிலில் முருகனை நளினி சந்தித்துப் பேசினார். இதற்காக காலை 10 மணிக்கு பிரம்மபுரத்திலிருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் நளினியை வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு 10.50 மணி முதல் 11.20 மணி வரை நளினி முருகன் இருவரும் சந்தித்து பேசினர். நளினி விடுதலை தொடர்பான மனுவை இன்று சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    சந்திப்பு முடிந்ததும் மீண்டும் நளினி பிரம்மபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    நளினி விடுதலை மனுவை தள்ளுபடி செய்த நிலையில் முருகனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்தார்.
    • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு தன் சிறப்பு அதிகாரத்தை கொண்டு விடுதலை செய்துள்ளது.

    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது.

    இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவு எடுக்கவில்லை.

    இதையடுத்து, கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்தார். அதே போல, ரவிச்சந்திரனும் விடுதலை செய்ய கோரி வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம், மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 6-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பித்தனர்.

    தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு தன் சிறப்பு அதிகாரத்தை கொண்டு விடுதலை செய்துள்ளது.

    அது போன்ற சிறப்பு அதிகாரம் இந்த ஐகோர்ட்டுக்கு இல்லை. எனவே ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடியாது.

    அவர்களது மனுக்கள் விசாரணைக்கு உகந்தது இல்லை. அதனால் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.

    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் தனக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, சாந்தன் கடிதம் அனுப்பி உள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. அதனால் இந்த வழக்கில் கைதான மற்ற 6 பேரும் தங்களையும் விடுதலை செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சாந்தன் தனது விடுதலை தொடர்பாக சிறை நிர்வாகம் மூலம் நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இலங்கையில் வசித்த எனது தந்தை உயிரிழந்தபோது இறுதிசடங்கிற்கு கூட செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது தாயார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

    தாயாரை கவனிக்கவும், குடும்பத்தை பிரிந்து, அனைத்து ஆசைகளையும் மறந்து சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் எனக்கு குடும்பத்தோடு இணைந்து வாழ வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரத்தில் நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று பிரியங்கா கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார்கள்.

    அவர்கள் நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யும்படி கோரிக்கை எழுந்தது.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது, 2016-ம் ஆண்டு இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், 2018-ம் ஆண்டு தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

    அதன்பிறகு தமிழக அமைச்சரவையில் 7 பேர் விடுவிப்பு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில், 7 பேர் விடுதலை சம்பந்தமாக கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே, 7 பேரையும் கவர்னர் விடுவிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்று கவர்னரை பல்வேறு கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன.


    இது சம்பந்தமாக ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    தனிப்பட்ட முறையில் எனக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. வன்முறை மீது மேலும் வன்முறையை ஏவுவது சரியான பதிலாக இருக்க முடியாது. வன்முறைக்கு அகிம்சைதான் சரியான பதிலாக இருக்க முடியும்.

    இந்த விவகாரத்தை பொறுத்த வரை 2 விதமான வி‌ஷயங்கள் உள்ளன. ஒன்று எனது தனிப்பட்ட வி‌ஷயம் தொடர்பானது.

    அதாவது கொல்லப்பட்டவர் எனது தந்தை. அந்த வகையில் எனது கருத்துக்களை ஏற்கனவே பல முறை கூறி விட்டேன்.

    இந்த கொலையில் தண்டனை பெற்றுள்ள நளினியையும் நான் ஜெயிலுக்கு சென்று சந்தித்தேன். நளினியும் என் வேதனை தொடர்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். என்ன தான் வேதனை இருந்தாலும் நான் உறுதியாக இருந்தேன்.

    அடுத்ததாக எனது தந்தையின் கொலை அரசியல் தொடர்பானது. அது, முழுமையாக வேறுபட்டது. அரசியல் ரீதியாக பார்க்கும் போது, அவர் ஒரு முன்னாள் பிரதமர். அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட கொலை. பயங்கரவாதத்தின் செயலால் இந்த கொலை நடந்தது. அதில் மேலும் பலர் கொல்லப்பட்டனர்.

    எனவே, இந்த வி‌ஷயத்தில் மனிதாபிமான முறையில் மகளாகிய நான் எடுத்த முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    பிரியங்கா, நளினியை 2008-ம் ஆண்டு ஜெயிலில் சந்தித்து தனது தந்தை கொலை பற்றி பல வி‌ஷயங்களை கேட்டறிந்தார். ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள்? என்பது வெளியே தெரியாமல் இருந்தது.

    8 வருடங்களுக்கு பிறகு இந்த சந்திப்பு சம்பந்தமாக நளினி தகவல் வெளியிட்டார். அதில், பிரியங்கா என்னிடம் பேசும்போது, என் தந்தை மிகவும் நல்லவர். மென்மை போக்கு உடையவர். அவரை ஏன் கொன்றார்கள்?

    என்ன ஒரு காரணம் இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு இருக்கலாமே என்று கேட்டு அழுதார். அதைப்பார்த்து நானும் அழுது விட்டேன் என்று நளினி கூறியது குறிப்பிடத்தக்கது.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்துள்ளார். #BanwarilalPurohith #RajivCaseConvicts
    சென்னை:

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக முடிவெடுக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    ×