search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடிகள் கைது"

    • பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார்.
    • குற்றவாளி பிரவீன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34).

    வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளரான இவரை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது.இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் நீடாமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் பாரதி (வயது 32), வீரபாண்டியன் (29), சூர்யா (21), அரசு (20), மாதவன் (21) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.தொடர்ந்து மீதமுள்ள கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா அருகில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பிரவீன் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கிய போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். உடனே பிரவீன் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அவரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

    ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் பிரவீனை பிடிக்க முயன்றபோது அவரை மீண்டும் தாக்கி உள்ளான்.

    இதனால் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீன் முட்டுக்கு கீழே காலில் சுட்டார். இதில் பிரவீன் காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

    இதையடுத்து பிரவீன் மற்றும் அவரால் வெட்டப்பட்டு காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகிய 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    நள்ளிரவில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு வந்து குற்றவாளி பிரவீனிடம் விசாரணை நடத்தினார். மேலும் சிகிச்சை பெறும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்னோவிடமும் விசாரணை நடத்தி அவரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.

    இதையடுத்து குற்றவாளி பிரவீன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    பிடிப்பட்ட ரவுடி பிரவீன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கொலையாளிகள் 6 பேர் சிக்கி உள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தப்பிப்பதற்காக கையில் இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு, காவலர் சுடலைமணி ஆகிய இருவரையும் ஜெயபிரகாஷ் கையில் வெட்டினார்.
    • திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு வந்து குற்றவாளி பிரவீனிடம் விசாரணை நடத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சோரீஸ்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 45). வக்கீலான இவர் நகை அடகு கடையும் நடத்தி வந்தார்.

    இவர் கடந்த மாதம் 22-ந்தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பித்து செல்ல முத்துக்குமார் கடையை விட்டு வெளியே ஓட முயன்றார். இருப்பினும் அந்த கும்பல் அவரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்தது.

    இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    கடந்த 2003-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ராஜேஷின் அண்ணன் ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். அவரது உடல் கடந்த 2006-ம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராஜேஷ் மற்றும் வக்கீல் முத்துக்குமார் ஆகியோர் குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் ராஜேஷ் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ராஜேஷ் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக வக்கீல் முத்துக்குமார் இடையூறாக இருந்து வந்ததால், ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் தூண்டுதலின்பேரில் ஒரு கும்பல் முத்துக்குமாரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து வழக்கு தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கும்பலை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஸ்டீபன், சிவக்குமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய கொலையாளிகளில் ஒருவரான ஆறுமுகநேரியை சேர்ந்த பாஸ்கரை மும்பையில் வைத்து தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்தது. மேலும் இதில் தொடர்புடைய 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 5 பேரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த கொலையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ராஜேசின் சகோதரரான கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ்(38) என்பவர் புதுக்கோட்டை அருகே தட்டப்பாறையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனே தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் தலைமை காவலர் சுடலைமணி உள்பட 7 பேர் கொண்ட குழு அங்கு விரைந்து சென்றது. அப்போது அங்கு பதுங்கி இருந்த ஜெயபிரகாஷ் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார்.

    ஆனால் அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். எனவே தப்பிப்பதற்காக கையில் இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு, காவலர் சுடலைமணி ஆகிய இருவரையும் ஜெயபிரகாஷ் கையில் வெட்டினார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் ஜெயபிரகாசின் காலில் சுட்டார். இதனால் அவர் ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார்.

    உடனே அவரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஜெயபிரகாஷ் மற்றும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மற்றொரு செய்தி...

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34).

    வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளரான இவரை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் நீடாமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் பாரதி (வயது 32), வீரபாண்டியன் (29), சூர்யா (21), அரசு (20), மாதவன் (21) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து மீதமுள்ள கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா அருகில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பிரவீன் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கிய போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். உடனே பிரவீன் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அவரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

    ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக் டர் இளங்கோவை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் பிரவீனை பிடிக்க முயன்றபோது அவரை மீண்டும் தாக்கி உள்ளான்.

    இதனால் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீன் முட்டுக்கு கீழே காலில் சுட்டார். இதில் பிரவீன் காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

    இதையடுத்து பிரவீன் மற்றும் அவரால் வெட்டப்பட்டு காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகிய 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நள்ளிரவில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு வந்து குற்றவாளி பிரவீனிடம் விசாரணை நடத்தினார். மேலும் சிகிச்சை பெறும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவிடமும் விசாரணை நடத்தி அவரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.

    இதையடுத்து குற்றவாளி பிரவீன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    பிடிப்பட்ட ரவுடி பிரவீன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கொலையாளிகள் 6 பேர் சிக்கி உள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
    • நெல்லை சுந்தர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் தென்னம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வெல்லமடை பிரிவு அருகே சந்தேகத்திற்கிடமாக சிலர் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை நோக்கி சென்றபோது சிலர் தப்பி ஓட முயன்றனர். இதனால் மேலும் சந்தேகம் அடைந்து போலீசார் அவர்களை விரட்டி சென்று 3 பேரை சுற்றி வளைத்தனர்.

    விசாரணையில் நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த பிரபல ரவுடி சுந்தர் (வயது31), வடமதுரை அருகே உள்ள பிலாத்து கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (34) மற்றும் நல்லாண்டவர் (29) என தெரிய வந்தது.

    இவர்கள் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    ஆனால் போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நெல்லை சுந்தர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் இங்கு தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதேபோல் பிலாத்து பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தன்னை பத்திரிகையில் பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

    தப்பி ஓடிய 4 பேர் யார்? என்பது குறித்தும், அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட 3 ரவுடிகளிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து இவர்கள் தொடர்பில் உள்ள ரவுடிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு திண்டுக்கல் சிறையில் எதிரிகள் இருக்கலாம் என்பதால் அவர்கள் தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
    • ரவுடிகளான புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சதீஷ், தண்டையார் பேட்டையை சேர்ந்த மோகன் என்பது தெரிந்தது.

    ராயபுரம்:

    புதுப்பேட்டையை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் புதுவண்ணாரப்பேட்டை 40-வது வார்டில் கழிவுநீர் அகற்றும் லாரியில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், புதுவண்ணாரப்பேட்டை அம்மனிம்மன் தோட்டம் பகுதியில் கழிவுநீர் அடைப்பை லாரி மூலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வினோத்திடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டினர். இதில் வினோத்தின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ரவுடிகளான புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சதீஷ், தண்டையார் பேட்டையை சேர்ந்த மோகன் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செயதனர். சதீஷ் மீது அடிதடி, வழிபறி, கொலை முயற்சி, வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மதுரையில் கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • கீரைத்துறை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்கு வாசல் போலீஸ் சரகத்தில் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை போலீசார் தினமும் ரோந்து சென்று வருகின்றனர். கண்மாய்கரை, ராஜமான் நகரில் ரோந்து சென்றனர். கங்கை அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் காமராஜர்புரம் இந்திரா நகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் எலி தினேஷ் (வயது 22) என்பது தெரியவந்தது.

    இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் வலதுகரமாக திகழ்ந்தவர். எனக்கு நிறைய எதிரிகள் உண்டு. தற்காப்புக்காக அரிவாள் வைத்திருந்தேன்" என்று தெரிவித்தார். ஆயுதங்களுடன் திரிந்த எலி தினேஷை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.

    முத்துப்பட்டி, அழகப்பன் நகரை சேர்ந்தவர் செல்வம் (45), ஆட்டோ டிரைவர். நேற்று இவர் சோலையழகுபுரம் தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் மது குடிக்க பணம் கேட்டார். செல்வம் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த வாலிபர், 'கத்தியால் குத்தி விடுவேன்' என்று மிரட்டி, செல்வத்தின் சட்டைபையில் இருந்த ரூ.385-ஐ பறித்து தப்பினார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலையழகுபுரம், இந்திரா நகரை சேர்ந்த ஆட்டோ பிரவீன் (32) என்பவரை கைது செய்தனர். அவர் மீது அவனியாபுரம், ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    • அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
    • கைதான ரவுடிகள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரக பகுதியில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த அத்தி பெரமனூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (எ) சுல்லா (வயது 22) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதே போல ஒசூர் சிப்காட் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் அதே அதே பகுதியை சேர்ந்த சாதிக் (24), அஜய்குமார் (21) ஆகியோரை ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

    கைதான ரவுடிகள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரவுடி பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி அப்பு ஆகியோர் பூந்தமல்லி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • ரவுடிகள் வேட்டையை தொடர்ந்து தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ராயபுரம்:

    சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ். பிரபல ரவுடியான இவர் மீது கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடுங்கையூர், மறைமலை நகர், சி.பி.சி.ஐ.டி. போலீசில் பிரகாஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பிரகாஷ் மீது உள்ளது. ஆயு தங்கள், வெடிபொருளை பதுக்கி வைத்திருந்ததாகவும் பிரகாஷ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ரவுடி பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி அப்பு ஆகியோர் பூந்தமல்லி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் ரவுடிகள் பிரகாஷ், அப்பு இருவரும் தப்பி ஓட முயன்றனர். இருவரையும் துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து 40 நாட்டு வெடிகுண்டுகள், 12 தோட்டாக்கள், கைத்துப்பாக்கி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீஸ் பிடியில் இருந்து இருவரும் தப்பி ஓடினர்.

    அப்போது இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் கை, கால்கள் உடைந்தன. இதையடுத்து பலத்த காயத்துடன் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போன்று ரவுடிகள் வேட்டையை தொடர்ந்து தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரவுடிகளிடம் இருந்து கத்தி, அரிவாள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அம்பத்தூர்:

    அரக்கோணம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடி கும்பலை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவின்படி அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அப்போது சூரப்பட்டு பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ரவுடிகள் 4 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். அங்கிருந்து மேலும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ரவுடிகளிடம் இருந்து கத்தி, அரிவாள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பஸ் நிறுத்தத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார்.
    • வீச்சரிவாளால் பழனி வேலை நோக்கி வெட்ட வந்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பாப்பான் கொள்ளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியம்இ வரது மகன் பழனிவேல்(35). இவர் சொரத்தான்குழி பஸ் நிறுத்தத்தில் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அங்கு மது போதையில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அசோக் ராமன் (24),சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த இனிய சம்பத் (23) இருவரும் பழனிவேல் இடம் ரூ.2000 மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு பழனிவேல் சரியான வியாபாரம் இல்லை. இப்போது என்னால் தர முடியாது என்று மறுத்துள்ளார். ஆத்திரம டைந்த இருவரும் நாங்கள் ஊரில் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா நாங்கள் மாமுல் கேட்டால் தரமாட்டாயா என கேட்டு அசிங்கமாக திட்டி உள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் பழனி வேலை நோக்கி வெட்ட வந்துள்ளனர்.

    இதனைப் பார்த்த பழனிவேல் சட்டென சுதாரித்துக் கொண்டு வில கவே பக்கத்தில் கிடந்த முந்திரிக்கட்டை எடுத்து தலையில் அடித்துள்ளனர். பின்னர் அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.1000 பணத்தை எடுத்துக் கொண்டு இனிமேல் நீ இங்கு கடை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் காடாம்பு லியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் முத்தாண்டி குப்பம் எஸ்.ஐ.ராஜாராமன், டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துசிறையில் அடைத்தனர்.

    • கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் மொத்தம் 119 ரவுடிகள் பிடிபட்டு உள்ளனர்.
    • மாவட்டத்தில் உள்ள 24 போலீஸ் நிலையங்கள் வாரியாக ரவுடிகள் பட்டியலில் இருந்த 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் ரவுடிகள் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இதேபோல் ஆவடி காவல் ஆணையத்துக்கு உட்பட்ட ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டத்தில் இயங்கி வரும் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது.

    கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் மொத்தம் 119 ரவுடிகள் பிடிபட்டு உள்ளனர்.

    இவர்களில் 87 ரவுடிகள் மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவுப்படி ரவுடிகள் பட்டியல் தயார் செய்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மாவட்டத்தில் உள்ள 24 போலீஸ் நிலையங்கள் வாரியாக ரவுடிகள் பட்டியலில் இருந்த 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களை கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. இவர்கள் உறுதிமொழியை மீறினால், உடனடியாக கைது செய்யப்பட்டு, 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • கொள்ளையடிக்க பதுங்கியிருந்தபோது அவர்கள் பிடிபட்டனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த சில மாதங்களாக நகை, பணம் பறிப்பு, கொள்ளை, கொலை போன்றவை அதிக அளவில் நடந்து வருகிறது. குற்றங்களில் பெரும்பாலும் சிறுவர்கள் ஈடுபடுவது கவலைக்குரியதாக உள்ளது.

    மதுைர நகரில் குற்றங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டு ள்ளார். இதையடுத்து சமூக விரோதசெயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், முகமது இத்ரீஸ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படைபோலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் ேராந்து சுற்றி வந்த னர். எல்லீஸ் நகர் மேம்பால கீழ்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பதுங்கி இருந்த 10 பேர் திடீரென போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர்.

    இதையடுத்து உஷாரான போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் 5 பேர் சிக்கினர். அவர்களை பரிசோதித்தபோது கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்வைத்திருப்பது தெரியவந்தது.

    5 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள், மேலவாசல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி ராஜா மகன் ஜெயராஜ் பாலா (வயது 23), திடீர் நகர் சந்தனவேல் மகன் மண்ட மகேந்திரன் (18), ஹீரா நகர் சுந்தரம் மகன் பேய் மணிகண்டன் (19), சுப்ரமணியன் மகன் பெருமாள் (19), மேலவாசல் பேச்சிமுத்து (39) என்பது தெரிய வந்தது. இவர்கள் எல்லீஸ் நகர், அரசரடி, மகபூப்பாளையம், பை-பாஸ் ஆகிய பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் பேலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி தப்பி ஓடிய மேலும் 5 பேரை ஆரப்பாளையம் வைைக தென்கரை பகுதியில் தனிப்படை போலீசார் சுற்ற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல்செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அவர்கள் திடீர் நகர் தக்காளி பாபு (42), வண்டியூர், பாண்டியன் நகர், திலகர் தெரு முருகன் மகன் அஞ்சான் சிவா (20), திடீர் நகர் காளிதாஸ் என்ற பல்லு காளி (28), மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த ஜோ திருமலை (25), ஹீரா நகர் சக்தி மகன் ஊமையன் செல்வராஜ் (19). என்பது தெரியவந்தது. இவர்களும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இவர்களை சேர்த்து ெமாத்தம் 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் மீண்டும் ரவுடி பிறந்தநாள் விழாவிற்கு அரிவாளுடன் திரண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். #ChennaiPolice
    பெரம்பூர்:

    வில்லிவாக்கம் அடுத்த ராஜமங்கலத்தை சேர்ந்த பிரபல ரவுடி குங்பூ குமார். இவரது பிறந்தநாள் விழாவிற்கு சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரவுடி கும்பல் ஒரே இடத்தில் திரளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்தநிலையில் புளியந்தோப்பு பகுதியில் வாகன சோதனையின்போது காரில் அரிவாளுடன் வந்த மாதவரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகளான கொளத்தூரை சேர்ந்த சிவா, புளியந்தோப்பை சேர்ந்த கோபால், ரமேஷ் ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 8 அரிவாள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல ரவுடி குங்பூ குமாரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பி வந்ததாக அவர்கள் கூறினர்.

    கைது செய்யப்பட்ட சரவணன் வட சென்னையை கலக்கி வந்த பிரபல தாதா சின்னா என்கிற கேசவலுவின் கூட்டாளி ஆவார். ஆந்திராவில் சட்டம் படித்த இவர் மீது கே.கே. நகரை சேர்ந்த காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன் கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் உள்ளன.

    மேலும் சின்னாவை கொலை செய்த ரவுடி ஆற்காடு சுரேசை தீர்த்து கட்ட திட்டமிட்டதாகவும் கைதானவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    கைதான சரவணன் உள்பட 4 பேரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே நடந்த ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 72 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் சரவணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவுடி பிறந்தநாள் விழாவில் ரவுடி கும்பல் அரிவாளுடன் ஒன்று திரண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விழாவில் எந்தெந்த பகுதி ரவுடிகள் பங்கேற்றனர் என்பது குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
    ×