என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரவிச்சந்திரன் அஸ்வின்"
- அஸ்வின் கொரோனா பாதிப்பால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
- கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அஸ்வின், இங்கிலாந்தில் இந்திய அணியுடன் இணைந்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின் இந்திய அணியோடு இங்கிலாந்து செல்லவில்லை. அவர் கொரோனா பாதிப்பால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அஸ்வின், இங்கிலாந்தில் இந்திய அணியுடன் இணைந்தார்.
லீசெஸ்டர்னாஷர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதையடுத்து லீசெஸ்டருக்கு சென்று இந்திய அணியுடன் இணைந்து கொண்டார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 1-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு சரியான நேரத்தில் குணமடைவார் என்று அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்