search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்மியமான காட்சி"

    • இன்று காலை தொடக்க விழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் நடைபெற்றது
    • கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் காய்கறி, சூப் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    கடலூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்கள் நலமுடன் வாழ வேண்டி நடப்போம் நலம் பெறுவோம் என்பதனை வலியுறுத்தி 8 கிலோமீட்டர் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி கடலூரில் டவுன் ஹாலில் இருந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சென்று மீண்டும் டவுன் ஹாலில் வந்த முடிவடைவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தொடக்க விழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் நடைபெற்றது . வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர்கள் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் நடந்து சென்றனர்.

    நடந்து செல்லும் பொதுமக்கள் அமர்வதற்கு சிமெண்ட் நாற்காலிகள், குடிநீர், பயோ கழிவறை, தற்காலிக நிழற்குடை போன்றவற்றை அமைத்திரு ந்தனர். மேலும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் காய்கறி, சூப் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்ப ட்டது. இதனைத் தொடர்ந்து நடந்து செல்பவர்களுக்கு உற்சாகப்படுத்தும் நோக்கில் கலை நிகழ்ச்சிகளும் நடனமும் நடைபெற்றது. பொதுமக்கள் சில்வர் கடற்கரையில் இருந்து மிகுந்த ஆசுவாசமாக குளிர்ந்த காற்றில் பொதுமக்கள் ரம்மியமான காட்சிகளை பார்த்தப்படி ஒருவரு க்கொருவர் ஆனந்தமாக பேசிக்கொண்டு சென்றதன் மூலம் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வோடு சென்றனர். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மாநகர திமுக செயலாளர் ராஜா, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிரேசி அகஸ்டின் பிரபாகரன், ஹேமலதா சுந்தரமூர்த்தி, ஆராமுது, சசிகலா ஜெயசீலன், சுதா அரங்கநாதன், பாலசுந்தர் மற்றும் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • இயற்கையை ரசிக்கலாம்
    • கலெக்டர் ஆய்வு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே அப்புக்கல் கிராமத்தில் உள்ள தொங்கும் பாறைகளை சுற்றுலா தலமாக மாற்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

    தொங்கும் பாறைகள்

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் மலையில் இயற்கையாக உருவான தொங்கும் பாறை உள்ளது.

    இந்த தொங்கும் பாறை ஒன்றின் மேல் ஒன்றாக அடக்கி வைக்கப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது.

    ஒரு பாறை மற்ற பாறைகளை தாங்கி நிற்கும் ரம்மியமான காட்சி அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது.

    தொங்கும் பாறை கூர்மையான விளிம்பு கொண்டதாகவும், ஒரு பீடம் போலவும் அமைந்துள்ளது. இந்த தொங்கும் பாறையில் 2 ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால ஆதி மனிதர்கள் வசித்துள்ளனர்.

    இதனை தொல்லியல் மற்றும் புவியியல் துறையினர் கண்டுபி டித்துள்ளனர். 1977 முதல் 1979-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறை ஆராய்ச்சி குழுவினர் அகழ்வாராய்ச்சி நடத்தி, சிகப்பு மற்றும் கருப்பு களிமண் பானைகள், சாம்பல் மலைகளின் எச்சங்களை கண்டுபிடித்து சேகரித்தனர்.

    மேலும் வேலூர் அருங்காட்சியகத்தினர் இந்த தொங்கும் பாறைகளுக்கு இடையில் இருந்த செப்பு வாள்கள் உள்ளிட்டவர்களை கண்டறிந்து அவற்றை வேலூர் அருங்காட்சி யகத்தில் வைத்துள்ளனர்.

    கலெக்டர் ஆய்வு

    வரலாற்றில் இடம் பிடித்துள்ள அப்புக்கல் மலை தொங்கும் பாறையை சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொல்லியல் துறை அதிகாரி களுடன், தொங்கும் பாறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் சுற்றுலாத்த லமாக மாற்றுவது குறித்து அதிகாரி களுடன் ஆலோ சனை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×