search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்"

    • அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் அபாயம்
    • கேமராவில் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் சிற்றாறு வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்துடன் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் குடியிருப்பு பகுதிக்கு வந்த புலி, அங்கிருந்த ஆடு-பசுமாட்டை கடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வனப்பகுதியினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வனப்பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பல்வேறு இடங்களில் மாட்டி இரவு- பகலாக கண்காணித்தனர். ஆனால் கேமராவில் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    இருப்பினும் புலி நடமாட்டம் குறித்த அச்சம் அந்தப் பகுதி மக்களிடம் உள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்து வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அதிகாலையில் வேலைக்கு செல்லும் போது புலி வந்தால் எங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர். புலியை பிடித்தால் மட்டும் தான், தாங்கள் வேலைக்கு செல்ல முடியும், தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரியிடம் அவர்கள் மனு கொடுத் துள்ளனர்.

    இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதற்கிடையில் பள்ளி-கல்லூரிக்கு செல்ல மாணவ-மாணவிகளும் அச்சப்படுகிறார்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்லாததால் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே வனத்துறையினர் கண்காணிப்பை அதிகப்படுத்தி புலியின் நடமாட்டத்தை கண்டறிந்து அதை பிடித்து வனத்தில் விட்டால் மட்டும் தான் அந்த பகுதி மக்களிடையே நிம்மதி ஏற்படும்.

    • பொதுவாக வடகிழக்கு பருவ மழை ஓய்ந்த பின்னர் நவம்பர் மாதம் 2 வது வாரம் மற்றும் டிசம்பர் மாதங்கள் ரப்பர் பால் சீசன் ஆகும்
    • தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீ லினை செய்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

    கன்னியாகுமரி:

    அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி தொழிலாளர் துறை, வனத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகிய 3 துறை அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தினசரி ரூ.40 ஊதிய உயர்வு வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தமாக மாற்றப்படாமலும், ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் 3 அமைச்சர்கள் முன்னி லையில் ஒப்பு கொள் ளப்பட்ட ரூ.40 ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

    இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் தினந்தோறும் தொழிலாளர்கள் ரப்பர் கழக கோட்ட மேலாளர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் 18-வது நாளாக நேற்று வேலை நிறத்தம் நடைபெற்ற நிலையில், கோதையாறு, சிற்றாறு, மணலோடை மற்றும் கீரிப்பாறை கோட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காத்திருப்புப் போராட் டங்கள் நடைபெற்றன.

    பொதுவாக வடகிழக்கு பருவ மழை ஓய்ந்த பின்னர் நவம்பர் மாதம் 2 வது வாரம் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரப்பர் பால் சீசன் என்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக ரப்பர் கழகத்திற்கு தினம்தோறும் தமிழக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவ தாக கூறப்படுகிறது. இதைப் போன்று தொழிலா ளர்களுக்கு ஊதிய இழப்பும் ஏற்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் தினமும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவரமாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீ லினை செய்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

    இந்நிலையில் கால வரையற்ற வேலை நிறுத் தித்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதர வாக கன்னியாகுமரி மாவட்ட சி.ஐ.டி.யூ. தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்தில் சங்க பொதுச் செயலாளர் வல்சகுமார், தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×