search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகசிய வாக்கெடுப்பு"

    • வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் இன்று (மே 22) பதவியேற்றுக்கொண்டார்.
    • முக்கிய அரசாங்க உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்த நிலையில் இந்த ஊழல் விவகாரம் வியட்நாம் அரசியலில் பூதாகரமாக வெடித்தது.

    வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் இன்று (மே 22) பதவியேற்றுக்கொண்டார். முந்தைய ஜனாதிபதி வோ வான் துவோங் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி விலகினார்.

    முக்கிய அரசாங்க உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்த நிலையில் இந்த ஊழல் விவகாரம் வியட்நாம் அரசியலில் பூதாகரமாக வெடித்தது.

    ஊழல் தடுப்பு குழுவின் துணைத் தலைவராக தற்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள டோ லாம் இருந்த நிலையில் தனது அரசியல் போட்டியாளர்களை வீழ்த்துவதற்காக இந்த ஊழல் விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.

     

    இன்று தனது பதவியேற்பின்போது உரையாற்றிய டோ லாம் கூறுகையில் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்குத் தான் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 66 வயதான டோ லாம், 2016 ஆம் ஆண்டு முதல் பொது பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார், மேலும் வியட்நாம் மனித உரிமை இயக்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவார்.

    கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில், வியட்நாம் நான்கு நபர்களைக் கொண்ட தலைமைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது, அதில் அதிபர், பிரதம மந்திரி மற்றும் தேசிய சட்டமன்றத்தின் தலைவர் ஆகியோர் அடங்குவர். அதிபரை அரசுப் பிரதிநிதிகளின் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுகின்றனர்.

    முன்னதாக முந்தைய அதிபர் வோ வான் துவோங் அதிபராகி ஒரு வருடமே பதவியிலிருந்த நிலையில் ஊழலுக்காகத் தனது அதிகாரங்களை துஷ்ப்ரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் வலுவாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அவரைத்தொடர்ந்து தேசிய சட்டமன்றத் தலைவரும் கடந்த மாதம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
    • ரெயில்வே பணியா ளர்கள் ஆர்வத்துடன் ரகசிய வாக்கெடு ப்பில் கலந்து கொண்டு தங்களது கருத்து க்களை தெரிவித்த னர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தெற்கு ெரயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்டம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் 50 சதவீதம் பஞ்சப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூட்டேஷன் வேண்டும்.

    குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. எஸ்.ஆர்.எம்.யூ. கோட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை யில், திண்டுக்கல் கிளை தலைவர் மூர்த்தி முன்னிலையில் நடந்தது.

    எ.ஐ.ஆர்.எப்., எஸ்.ஆர்.எம்.யூ. தொழிலாளர்கள் கலந்து கொண்டு வாக்கு செலுத்தி னர். ெரயில்வே பணியா ளர்கள் ஆர்வத்துடன் ரகசிய வாக்கெடு ப்பில் கலந்து கொண்டு தங்களது கருத்து க்களை தெரிவித்த னர். இதில் பொருளாளர் வெங்கட்ராமன், உதவி தலைவர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×