search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுவராஜா"

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குட்கா ஊழலை பொருத்தவரை ஆளுங்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் தொடங்கி சட்ட மன்ற உறுப்பினர் வரை பலருக்கு தொடர்பு உள்ளது. முதலமைச்சர் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த வி‌ஷயத்தில் அமைதி காத்து வருகிறார்.

    இன்று தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    அடுத்த வாரம் த.மா.கா. இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள எண்ணை நிறுவனங்கள் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.

    மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி. எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

    ஈரோடு பெரும்பள்ளம் ஓடை ஏரி, குளங்கள், கீழ் பவானி வாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலந்து வரு கிறது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்து சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தவில்லையென்றால் சென்னையில் முதல்- அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். கடந்த 2 ஆண்டுகளாகவே தமிழக அரசு விவசாயிகளின் நலனில் அக்கறையில்லாத அரசாக செயல்பட்டு வருகிறது.

    சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விளைநிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தற்போது உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முற்பட்டால் விரைவில் சென்னையில் முதல்வரின் பணியை தடுக்கும் வகையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம். காவிரி மேலாண்மை வாரிய வி‌ஷயத்தில் தமிழக அரசு பாரதிய ஜனதாவுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    தொடர்ந்து காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சித்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என அனைவரும் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும்.

    தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம் என்ற போர்வையில் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. சென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்படுவதாக கூறப்படும் எட்டு வழி சாலைக்கு 2 லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும். இதே போன்று தமிழகத்தில் கெயில் குழாய் பதிப்பது, உயர் மின் கோபுரம் அமைப்பதை விவசாய விளை நிலங்களில் அமைக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    ×