search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் வாகன சட்ட மசோதா"

    மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நாளை பேருந்து, ஆட்டோ, டெம்போ ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. #MotorVehiclesAmendmentBill
    புதுச்சேரி:

    மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், டோல்கேட் கட்டணத்தை கைவிட வேண்டும், இன்சூரன்ஸ் திட்டத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    புதுவையிலும் நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடக்கிறது. போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., தொ.மு.ச., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    மேலும், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கம், மணல் லாரி, பார்சல் சர்வீஸ், ரூட் லாரி, மினி லாரி, லோடு கேரியர் தொழிற்சங்கங்கள், வாகன உதிரிபாகம் கடை, சுற்றுலா வாகனம் தனியார் பேருந்து தொழிலாளர் சங்கம் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

    இதனால் புதுவையில் நாளை பஸ், லாரி, ஆட்டோ, டெம்போ, சுற்றுலா வாகனங்கள் ஓடாது.

    இது குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க செயலாளர் சேது செல்வம் கூறியதாவது:-

    போக்கு வரத்து தொழிலாளர்களில் வாழ்வுரிமையை காக்க நாடு முழுவதும் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்கள், போக்குவரத்து அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

    அவர்களும் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினரும், ஆதரவு தந்துள்ளனர். இதனால் நாளை பஸ், ஆட்டோ, டொம்போ, லாரி ஓடாது.

    வாகன உதிரிபாக கடைகள், ஒர்க்‌ஷாப்புகள் மூடப்பட்டிருக்கும். போராட்டத்தையொட்டி, பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்கள், ஊர்வல மாக சென்று புதிய பஸ் நிலையம் அருகில் மறியல் போராட்டமும் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு சேது செல்வம் கூறினார். #MotorVehiclesAmendmentBill
    கோரிக்கைககளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் கோவையில் டாக்சி, ஆட்டோ நாளை ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
    கோவை:

    கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ.) பொது செயலாளர் ரபீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். டோல்கேட் வசூலை கைவிட வேண்டும். இன்ஸ்சூரன்ஸ் பெயரில் அடிக்கும் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (7-ந் தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

    இதில் கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) பங்கேற்கிறது. நாளை காலை 10 மணிக்கு கோவை டவுன் ஹால் பகுதியில் மறியல் போராட்டத்தையும் நடத்த உள்ளோம். நாளை வேலை நிறுத்தத்தின் போது டெம்போ, டாக்சி, வேன், மினிடேர், மேக்சி கேப், டாடாஏசி, ஆட்டோ, லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது.

    பள்ளிகளுக்கு இயக்கப்படும் ஆட்டோ, வேன் போன்றவைகளையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட அளவில் ஆட்டோ, கால் டாக்சி உள்பட சுமார் 38 ஆயிரம் வாகனங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறது. சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோ, கால் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத்தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

    சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி.எப்., பாட்டாளி, விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி, தே.மு.தி.க. போன்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன.

    தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு போக்குவரத்து, ஆட்டோக்கள், கால்டாக்சிகள் போன்றவை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.



    லோடு ஆட்டோ, ஒர்க்‌ஷாப், டிரைவிங் ஸ்கூல் போன்ற மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளரும் சாலை போக்குவரத்து சம்மேளன தலைவருமான ஆறுமுக நயினார் கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக நாளை ஒருநாள் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக வேலைநிறுத்தம் நடக்கிறது. ஆளும்கட்சி தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து சங்கங்களும் இதில் பங்கேற்கின்றன. அதனால் நாளை ஆட்டோ, கால்டாக்சி, உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது. தமிழகத்தில் 3 லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. சென்னையை பொறுத்தவரை 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

    அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அண்ணாசாலை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MotorVehiclesAmendmentBill
    ×