search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் திருட்டு"

    • மின் மோட்டாரை காவலாளிகள் இல்லாத சமயத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
    • கைது செய்யப்பட்ட மணிவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

    கொண்டலாம்பட்டி:

    நடிகர் சரவணனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் சேலம் அருகே கருப்பூரை அடுத்த வட்டக்காடு மஞ்சயன்காடு பகுதியில் உள்ளது. இங்கிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டாரை காவலாளிகள் இல்லாத சமயத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து நடிகர் சரவணனின் உதவியாளர் நரசோதிபட்டி சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த காமேஷ் கருப்பூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மின்மோட்டாரை திருடிய ஓமலூர் அருகே உள்ள தாதையன்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிவேல் (வயது 20) என்ற வாலிபரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து மின்மோட்டாரை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மணிவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக  சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.
    • போர்வெலில் உள்ள மோட்டாரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதால் தண்ணீர் இல்லாமல் போய் விடு கிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் நலன் கருதி மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக  சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

    மேலும் சுகாதார  வளாகத்தின் பின்புறம் போர்வெல் அமைக்க ப்பட்டுள்ளது.இந்த போர்வெலில் உள்ள மோட்டாரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதால் தண்ணீர் இல்லாமல் போய் விடு கிறது.

    மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி கருவேல மரங்கள் முள்புதர்கள் காடு போல மண்டி கிடக்கி றது.இதனால் சுகாதார வளாகத்தின் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதுகுறித்து சம்ம ந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மகளிர்மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×