search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி"

    • ரூ.10 லட்சம் மதிப்பிலான நீர்த்தேக்கத் தொட்டியானது கட்டப்பட்டது.
    • விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார்.

    காங்கயம் : 

    காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பாப்பினி ஊராட்சி, வரதப்பம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். குடிநீர் தொட்டியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவனாந்தன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
    • சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் மேலகிருஷ்ணபேரி ஊராட்சிக்குட்பட்ட முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    ×