search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் செய்தி"

    • மேயரிடம் இன்று புகார் அளித்தனர்.
    • நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கோவை

    கோவை மாநகரா ட்சியில் வாரந்தோ றும் செவ்வாய்க்கிழமை அன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று காலை மேயர் கல்பனா தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

    மேயரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகராட்சி 83-வது வார்டுக்குட்பட்ட சோமசுந்தரம் ஆலை, காளீஸ்வரா ஆலை பாதையில் உள்ள ரெயில்வே பாலம் அருகில் சிலர் கோழி கழிவுகளை கொட்டிசுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அதேபோன் அந்த பகுதி முழுவதும் திறந்த வெளி கழிப்பறையாக உள்ளது. அந்த பாதை வழியாக நடக்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பாதையில் இருபுறமும் கார் மற்றும் லாரிகளை விரிசையாக நிறுத்தி வருவதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வார்டு பகுதியில் இரவு நேரத்தில் குடிநீர் கொடுப்பதால் இரவு நேரத்தில் கண்வி ழித்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 10-ல் இருந்து 12 நாட்கள் என்ற நிலையில், குறைந்த இடைவெளியில்த ண்ணீர் கொடுக்கவும் இரவு நேரத்தில் தண்ணீர் தருவதை மாற்றி பகல்நேரத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    மேலும் சொத்து வரி, குடிநீர் வரி, மின்விளக்கு, சாலை வசதி என பொது பிரச்சினைகள் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட கோரி க்கை மனுக்களை மக்கள் மேயரிடம் அளித்த னர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

    ×