search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி சாவு"

    • பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
    • இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இங்கு வந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 நாள் வேலையின்போது பரிதாபம்
    • போலீஸ் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெரியதாய் ( வயது 75 ). இவர் நேற்று வளையாம் பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஏரிப்பகுதியில் 100 நாள் பணி யில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சக பணியாளர்கள் உடனடியாக மூதாட்டியை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் . ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

    இதுதொடர்பாக வாணி யம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×