search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஷ்பிகுர் ரஹீம்"

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்னில் அவுட் ஆனார்.
    • இந்த முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனையை ரஹீம் படைத்தார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷ்பிகுர் ரஹீம் தேவையில்லாமல் அவுட் ஆனார். அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமிசன் பந்து வீச்சை எதிர் கொண்டார். அப்போது தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ரஹீம், பேட்டில் பட்டு பந்து அவரை விட்டு தள்ளி சென்றது. உடனே அந்த பந்தை கையால் தள்ளி விட்டார்.

    இதை பார்த்த நியூசிலாந்து வீரர்கள் அவுட் என அப்பீல் செய்தனர். உடனே நடுவர்கள் 3-ம் நடுவரிடம் முறையீட்டார். இதனையடுத்து 3-ம் நடுவர் அவுட் என அறிவித்தார். இதன் மூலம் obstructing the field முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனை படைத்தார்.

    • டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எனது கவனத்தை செலுத்த உள்ளேன் என முஷ்பிகுர் ரஹீம் கூறினார்.
    • ஐ.பி.எல் போன்று வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன்.

    வங்காளதேச அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். 35 வயதான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 16 வயதில் வங்காளதேச அணிக்காக 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன இவர் டி-20 போட்டிகளில் 2006-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார்.

    2007-ம் ஆண்டு முதல் டி-20 உலக கோப்பைகளில் வங்காளதேச அணிக்காக முஷ்பிகுர் ரஹீம் ஆடியுள்ளார்.

    இந்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பைக்கு அந்நாட்டு அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹீம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    தனது ஒய்வு குறித்து முஷ்பிகுர் ரஹீம் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எனது கவனத்தை செலுத்த உள்ளேன்.

    மேலும், ஐ.பி.எல் போன்று வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் எம்.ஆர்.15 என்ற பெயருடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எனது நாட்டுக்காக விளையாட காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து முஷ்பிகுர் ரஹீம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் வங்காளதேச அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி-20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 5,235 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 6,774 ரன்களும், டி-20 போட்டிகளில் 1,500 ரன்களும் அடித்துள்ளார்.

    ×