search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் மாணவர் சந்திப்பு"

    • பள்ளி காலத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை சிலாகிப்புடன் அசைபோட்டனர்.
    • பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு பழைய நினைவலைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

    கோவை:

    கோவை வின்சென்ட் ரோடு, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லஆயன் உயர்நிலைப்பள்ளியில் 1980-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புவரை படித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, போத்தனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்தது, பலரது முகத்திலும் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, பூரிப்பை ஏற்படுத்தியது.

    மேலும் அவர்கள் தங்களுக்கான அடையாளம், நட்பு, பாசத்தை ஒருவருக்கொருவர் புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள்பள்ளி காலத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை சிலாகிப்புடன் அசைபோட்டனர். மேலும் முன்னாள் மாணவர் சந்திப்புக்காக இதே பள்ளியில் கடந்த 1990-ம் ஆண்டு படித்த ஆர்.எஸ். புரத்தை சேர்ந்த கார்த்தி (வயது 54) என்பவர், கடந்த கால நினைவுகளை நினைவு கூறும் விதமாக, அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த காக்கி அரைக்கால் டவுசர் மற்றும் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வந்தி ருந்தார்.

    இது அங்கு திரண்டு இருந்த பழைய நண்பர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கார்த்தி கூடலூர் பகுதியில் உள்ள கோவிலில் தலைமை குருக்களாக பணியாற்றி வருகிறார்.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு பழைய நினைவலைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் பேசுகையில், இன்றைய தலைமுறை மாணவர்கள் இந்த நாட்டிற்காக தான் கற்ற கல்வியை பிறர் பயன்பட நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாக பேசி, முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பிள மின் மரியஜோசப் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்களுக்கு மலர்கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
    • பிரபலமான,கடலை மிட்டாய்,பொறி உருண்டை போன்ற திண்பண்டங்கள் விற்பனை கடை அமைக்கப்பட்டு இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997 - 98ம் ஆண்டில் 12ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்துடன் 25ம் ஆண்டு வெள்ளிவிழா நிறைவில் சந்தித்து கொண்டனர். நிகழ்ச்சியில் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் பாண்டியன், சண்முகம், ஸ்டோன்கார்டு,கந்தசாமி,பழனிசாமி, ராஜரத்தினம், ஹரிகரன், லோகநாயகி, தமயந்தி, கிருஷ்ணவேணி, விஜயலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு மலர்கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    ஆசிரியர்கள் தங்களது முன்னாள் மாணவர்களை குடும்பத்துடன் அழைத்து நலம் விசாரித்து ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பையொட்டி 1980,1990ம் ஆண்டில் பிரபலமான,கடலை மிட்டாய்,பொறி உருண்டை போன்ற திண்பண்டங்கள் விற்பனை கடை அமைக்கப்பட்டு இருந்தது.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஐம்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது
    • 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2001 ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஐம்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மணிமேகலை தலைமை தாங்கினார். அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மனோன்மணி, ராமலிங்கம், ஆறுமுகம் , பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னராசு 2001 ம் ஆண்டு அப்பள்ளியிலேயேமாணவராக பயின்று இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

    2021 -22 ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியின் ஆய்வகத்துக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான மடிப்பு நுண்ணோக்கியும், நூலகத்திற்கு புத்தகங்களும் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி பூங்காவுக்காக பூச்செடிகள் நடவு செய்யப்பட்டது. அனைத்து முன்னாள் ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து பூச்செடிகளை நடவு செய்தனர். ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னாள் மாணவர் பேரவை அமைத்து பள்ளியின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக உதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ரஞ்சித், கோகிலாமணி, இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×