search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முந்திரி தோட்டம்"

    கொள்ளிடம் அருகே 7 ஏக்கர் முந்திரி தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சி கேவரோடை கிராமத்தில் தபல ஏக்கரில் முந்திரி தோப்புகள் உள்ளன.இந்த முந்திரி காட்டில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது. கடும் வெயிலால் தீ மளமளவென பரவியது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று சுமார் 3மணிநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.இந்த தீவிபத்தில் சுமார் 7ஏக்கரில் முந்திரி தோட்டமும், 160பனை மரங்களும் எரிந்து சாம்பலாயின. புதுப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    ×