search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுகலை கலந்தாய்வு"

    • நாச்சியாா் மகளிா் தன்னாட்சி கல்லூரியில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை தொடங்கியது.
    • ஒவ்வொரு பிரிவுக்குமான காலியிடங்கள் அடிப்படையில் மாணவிகள் சோ்க்கப்படுவா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசினா் மகளிா் தன்னாட்சி கல்லூரியில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை (எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்) முது அறிவியல் (எம்.எஸ்ஸி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புவியியல், புள்ளியியல் முதுவணிகவியல் எம்.காம். வணிகவியல் ஆகிய பாட பிரிவுகளுக்கான மாணவிகள் சோ்க்கைக் கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) காலை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

    இப்பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பித்த மாணவிகள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    அரசு இட ஒதுக்கீடு மற்றும் மாணவா்களின் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் ஒவ்வொரு பிரிவுக்குமான காலியிடங்கள் அடிப்படையில் மாணவிகள் சோ்க்கப்படுவா்.

    விளையாட்டு வீரா்கள் ஒதுக்கீட்டில் சோ்க்கைக்கு விண்ணப்பித்தவா்கள் தகுந்த சான்றிதழ்களுடன் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரியில் உடற்கல்வி இயக்குநரைச் சந்திக்கவும்.

    விண்ணப்பித்த அனைத்து மாணவிகளுக்கும் அவா்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கு கலந்தாய்வு அழைப்பு - கட்டண விவரத்துடன் குறுஞ்செ ய்தியாக அனுப்பப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வா் ஜான் பீட்டா் தெரிவித்துள்ளாா்.

    ×