search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் மு.க.ஸ்டாலின்"

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
    • ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை திருப்பாலை பகு தியில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.மூர்த்தி தலைமையில் இன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியதாவது:-

    வருகின்ற டிசம்பர் மாதம் சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதற்கு முன்பாகவே அக் டோபர் 15 முதல் 31-ந்தே திக்குள் ஒன்றியம், வட்டம், பேரூர், பகுதி கழகங்கள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும்.

    மேலும் தலைமைக் க ழகம் அறிவிப்பு எதுவாயி னும் அதை மதுரை வடக்கு மாவட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ரூ.44 கோடி மதிப்பீட்டில் மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் பார்வையாளர் கள் அமரும் வகையில் பிர மாண்டமாக கட்டப்பட்டு வரும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு மைதானம் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

    எனவே இந்த மைதா னத்தை திறக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிறார். அவ ருக்கு நாம் சிறப்புமிகு வர வேற்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த கூட்டத்தில் சோழ வந்தான் எம்.எல்.ஏ. வெங்க டேசன், அவைத்த லைவர் பாலசுப்ரமணியன், பொரு ளாளர் சோமசுந்தர பாண்டி யன், மாவட்டச் துணைச் செயலாளர் ஆசை கண் ணன், இலக்கிய அணி நேரு பாண்டி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், ஒன்றிய செய லாளர்கள் ரகுபதி, சிறைச் செல்வன், தனசேகர், பால ராஜேந்திரன்,

    மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, பகுதி செயலாளர் சசிகுமார், மருதுபாண்டி, கௌரி சங்கர், இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாவட்ட அமைப்பாளர் அழகுபாண்டி, துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர், பேரூர் கழகச் செயலாளர் வாடிப்பட்டி பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருங்காலத்தில் தமிழகத்தில் நிலைநிறுத்தக்கூடிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • நிறை, குறைகள் இருக்கும் போது நான் உங்களிடம் கண்டிப்பாக கேட்பேன்.

    புதுக்கோட்டை

    தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி வாக்குச்சாவடி பாக நிலை முகவர்களுடன் காணொளி காட்சி மூலம் க லந்துரையாடல் நடத்தினார். இந்த கூட்டம் ஆலங்குடி தனியார் மாகாலில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.டி.தங்கமணி தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட துணைச்செயலாளர் ஞா.இளங்கோவன், தெற்கு ஒன்றிய செயலாளர் அரு வடிவேல், ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக பேசிய மு.க.ஸ்டாலின், வருங்காலத்தில் தமிழகத்தில் நிலைநிறுத்தக்கூடிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் அந்தந்த மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர்த, ஊராட்சி இவைகளில் உள்ள பாக நிலை இரண்டுக்கான நிலைய அலுவலர்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    மேலும் வரைவு வாக்காளர் திருத்தப்பட்டியல் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இன்றும் அந்த பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், இறந்தோர் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள பாக நிலை இரண்டில் உள்ள பொறுப்பாளர்கள் உடனடியாக அந்தந்த தேதிகளில் அதற்கு உண்டான படிவங்களை மக்களிடம் வழங்கவேண்டும்.

    வேலைகளை துரிதமாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் நீங்கள் தான் ஒருங்கிணைப்பு செய்து கொள்ள வேண்டும். நிறை, குறைகள் இருக்கும் போது நான் உங்களிடம் கண்டிப்பாக கேட்பேன். ஆகையினால் மாவட்ட நிர்வாகம் சொல்லக்கூடிய அறிவுரைகளை கேட்டு அதற்கு உண்டான உபகரணங்களை பெற்றுக் கொண்டு துரித வேலையில் ஈடுபட வேண்டும். வருங்கால தேர்தல் உங்கள் கையில் உள்ளது என்றும் ஆகையினால் வாக்குகளை சேகரிக்கும் பொறுப்பில் தற்போது முதலே நீங்கள் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    வாக்குச்சாவடி பாக நிலை 2-ல் உள்ள மாவட்ட, நகர, பேரூர் கழக கட்சி தலைவர்கள், ஒன்றி,ய நகர தலைர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கழக ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் ஏராளமா னோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


    ×