search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jallikattu ground"

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
    • ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை திருப்பாலை பகு தியில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.மூர்த்தி தலைமையில் இன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியதாவது:-

    வருகின்ற டிசம்பர் மாதம் சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதற்கு முன்பாகவே அக் டோபர் 15 முதல் 31-ந்தே திக்குள் ஒன்றியம், வட்டம், பேரூர், பகுதி கழகங்கள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும்.

    மேலும் தலைமைக் க ழகம் அறிவிப்பு எதுவாயி னும் அதை மதுரை வடக்கு மாவட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ரூ.44 கோடி மதிப்பீட்டில் மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் பார்வையாளர் கள் அமரும் வகையில் பிர மாண்டமாக கட்டப்பட்டு வரும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு மைதானம் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

    எனவே இந்த மைதா னத்தை திறக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிறார். அவ ருக்கு நாம் சிறப்புமிகு வர வேற்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த கூட்டத்தில் சோழ வந்தான் எம்.எல்.ஏ. வெங்க டேசன், அவைத்த லைவர் பாலசுப்ரமணியன், பொரு ளாளர் சோமசுந்தர பாண்டி யன், மாவட்டச் துணைச் செயலாளர் ஆசை கண் ணன், இலக்கிய அணி நேரு பாண்டி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், ஒன்றிய செய லாளர்கள் ரகுபதி, சிறைச் செல்வன், தனசேகர், பால ராஜேந்திரன்,

    மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, பகுதி செயலாளர் சசிகுமார், மருதுபாண்டி, கௌரி சங்கர், இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாவட்ட அமைப்பாளர் அழகுபாண்டி, துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர், பேரூர் கழகச் செயலாளர் வாடிப்பட்டி பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்; அமைச்சர் எ.வ. வேலு இன்று ஆய்வு செய்தார்.
    • சாகச விளையாட்டுக்கு என்று தனி இடம் அமைக்கப்பட உள்ளது.

    மதுரை

    தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது.

    அப்போது கீழக்கரை, சின்னஇலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் ஆய்வுக்கு உட்படுத்த ப்பட்டன. இதில் கீழக்கரை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு 66 ஏக்கரில் ஜல்லிக் கட்டு மைதானம் அமைப்பதற்கான பணி களில் தமிழக சுற்றுலா த்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாஸ்டர் பிளான் தயாராகி வருகிறது.

    மதுரையில் இருந்து 30 கி.மீ. தொலையில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மை தானம், அனைத்துவிதமான பாரம்பரிய விளையாட்டுக ளும் நடத்தும் வகையில் இருக்கும். அங்கு சாகச விளை யாட்டுக்கு என்று தனி இடம் அமைக்கப்பட உள்ளது.

    மைதானத்தை சுற்றிலும் ஜல்லிக்கட்சி அருங்காட்சி யம், கைவினை பொருட்கள் மையம் அமையும் வகையில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான கட்டுமான பணிகள் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் தமிழக பொதுப்பணி- நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று மதுரை வருகிறார். அப்போது அலங்காநல்லூருக்கு செல்லும் அவர், கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

    ×