search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலங்காநல்லூர்:அமைச்சர் எ.வ. வேலு இன்று ஆய்வு
    X

    அமைச்சர் எ.வ. வேலு

    அலங்காநல்லூர்:அமைச்சர் எ.வ. வேலு இன்று ஆய்வு

    • அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்; அமைச்சர் எ.வ. வேலு இன்று ஆய்வு செய்தார்.
    • சாகச விளையாட்டுக்கு என்று தனி இடம் அமைக்கப்பட உள்ளது.

    மதுரை

    தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது.

    அப்போது கீழக்கரை, சின்னஇலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் ஆய்வுக்கு உட்படுத்த ப்பட்டன. இதில் கீழக்கரை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு 66 ஏக்கரில் ஜல்லிக் கட்டு மைதானம் அமைப்பதற்கான பணி களில் தமிழக சுற்றுலா த்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாஸ்டர் பிளான் தயாராகி வருகிறது.

    மதுரையில் இருந்து 30 கி.மீ. தொலையில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மை தானம், அனைத்துவிதமான பாரம்பரிய விளையாட்டுக ளும் நடத்தும் வகையில் இருக்கும். அங்கு சாகச விளை யாட்டுக்கு என்று தனி இடம் அமைக்கப்பட உள்ளது.

    மைதானத்தை சுற்றிலும் ஜல்லிக்கட்சி அருங்காட்சி யம், கைவினை பொருட்கள் மையம் அமையும் வகையில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான கட்டுமான பணிகள் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் தமிழக பொதுப்பணி- நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று மதுரை வருகிறார். அப்போது அலங்காநல்லூருக்கு செல்லும் அவர், கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

    Next Story
    ×