search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு மைதானம்"

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
    • ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை திருப்பாலை பகு தியில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.மூர்த்தி தலைமையில் இன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியதாவது:-

    வருகின்ற டிசம்பர் மாதம் சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதற்கு முன்பாகவே அக் டோபர் 15 முதல் 31-ந்தே திக்குள் ஒன்றியம், வட்டம், பேரூர், பகுதி கழகங்கள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும்.

    மேலும் தலைமைக் க ழகம் அறிவிப்பு எதுவாயி னும் அதை மதுரை வடக்கு மாவட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ரூ.44 கோடி மதிப்பீட்டில் மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் பார்வையாளர் கள் அமரும் வகையில் பிர மாண்டமாக கட்டப்பட்டு வரும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு மைதானம் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

    எனவே இந்த மைதா னத்தை திறக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிறார். அவ ருக்கு நாம் சிறப்புமிகு வர வேற்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த கூட்டத்தில் சோழ வந்தான் எம்.எல்.ஏ. வெங்க டேசன், அவைத்த லைவர் பாலசுப்ரமணியன், பொரு ளாளர் சோமசுந்தர பாண்டி யன், மாவட்டச் துணைச் செயலாளர் ஆசை கண் ணன், இலக்கிய அணி நேரு பாண்டி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், ஒன்றிய செய லாளர்கள் ரகுபதி, சிறைச் செல்வன், தனசேகர், பால ராஜேந்திரன்,

    மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, பகுதி செயலாளர் சசிகுமார், மருதுபாண்டி, கௌரி சங்கர், இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாவட்ட அமைப்பாளர் அழகுபாண்டி, துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர், பேரூர் கழகச் செயலாளர் வாடிப்பட்டி பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு தார்சாலை அமைக்கும் பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை வகுத்து மலை பகுதியில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடி மதிப்பில் ஏற்கனவே பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் மைதா னத்திற்கு வருவதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் 3.3 கி.மீ. தூரம் ரூ.21 கோடியே 70 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, பாலங்கள் கட்டுவதற்காக பூமிபூஜைகள் நடந்தது. இதனை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துகுமாரி, இளநிலை பொறியாளர் வெங்கேஷ் பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பணிகள் இடைகரை பாலம் முதல் ஜல்லிக்கட்டு மைதானம் வரை நடைபெறும். வரும் டிசம்பர் மாதம் கடைசியில் சாலை பணிகள் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் பால சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், யூனியன் சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதி பாண்டியராஜன், நகர் செயலாளர்கள் மனோகர வேல் பாண்டியன், ரகுபதி, அணி அமைப்பா ளர்கள் சந்தன கருப்பு, பிரதாப், கார்த்திக், ராகுல், சாலை ஆய்வாளர்கள் பாஸ்கரன், மூக்கன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×