search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கடேசன் எம்.எல்.ஏ."

    • புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு தார்சாலை அமைக்கும் பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை வகுத்து மலை பகுதியில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடி மதிப்பில் ஏற்கனவே பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் மைதா னத்திற்கு வருவதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் 3.3 கி.மீ. தூரம் ரூ.21 கோடியே 70 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, பாலங்கள் கட்டுவதற்காக பூமிபூஜைகள் நடந்தது. இதனை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துகுமாரி, இளநிலை பொறியாளர் வெங்கேஷ் பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பணிகள் இடைகரை பாலம் முதல் ஜல்லிக்கட்டு மைதானம் வரை நடைபெறும். வரும் டிசம்பர் மாதம் கடைசியில் சாலை பணிகள் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் பால சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், யூனியன் சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதி பாண்டியராஜன், நகர் செயலாளர்கள் மனோகர வேல் பாண்டியன், ரகுபதி, அணி அமைப்பா ளர்கள் சந்தன கருப்பு, பிரதாப், கார்த்திக், ராகுல், சாலை ஆய்வாளர்கள் பாஸ்கரன், மூக்கன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், வருவாய், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×