search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலுதவி பயிற்சி"

    • சிகிச்சைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்
    • 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் போலீஸ் நிலைய வளாகத்தில் போலீசாருக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. காவேரிப்பாக்கம், அவளூர், பாணாவரம், நெமிலி, கொண்டபாளையம், சோளிங்கர், ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். பயிற்சியில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கலந்து கொண்டார். அப்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் முன் அவருக்கு செய்யவேண்டிய சிகிச்சைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    மேலும் மழைக் காலங்களில் ஆறு, குளம், ஏரி கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தவறி விழுந்து மீட்கப்படுவோருக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என விளக்கம் அளிக்கப்பட்டது.

    • திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கல்லூரி சார்பில் தூய்மை பணி செய்யப்பட்டது.
    • வெள்ளம், புயல், தீ விபத்து, போன்ற காலங்களில் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 1 சார்பில் மணலியில் நடைப்பெற்று வரும் முகாமின் மூன்றாம் நாள் சிவன் கோயில் தூய்மை பணி செய்யப்பட்டது.

    அப்போது பேரிடரை எதிர் கொள்வோம் என்ற தலைப்பில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் பேசும்போது, எதிர்காலங்களில் காலநிலை மாறுபாடுகளால் பேரிடர் என்பது தவிர்க்க முடியாதததாகிவிட்டது.

    அனைவரும் பேரிடரை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

    வெள்ளம், புயல், தீ விபத்து, போன்ற காலங்களில் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    நம்மை மட்டுமல்ல மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்.

    அனைவரும் பேரிடர், முதலுதவி பயிற்சிகளை பெற வேண்டும்.

    பாதிப்பு ஏற்படும் நேரங்களில் அரசு துறைகளுக்கும், காவல், தீயணைப்பு துறை, மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும்.

    ஒவ்வொருவரும் முன்கள மீட்பாளர்களாக தயாராக வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சுபத்ரா ரவி தலைமை வகித்தார்.

    வர்த்தக சங்க தலைவர் ரவி, மகளிர் குழு செயலாளர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியை என். எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பன்னீர்செ ல்வம், பேராசிரியர் லோகநாதன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×