search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்புதர்களாக காணப்படும் பஸ் நிறுத்தம்"

    • அத்தியாவசிய பணிக்கு அருகே உள்ள பகுதிக்கு செல்வோரும் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வந்தனர்.
    • புதிய பஸ் நிறுத்தம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்,

    அன்னூர் வட்டம் காட்டம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு உட்பட்ட காட்டம்பட்டியில் பஸ் நிறுத்தம் உள்ளது.

    இதன் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் இதை பயன்படுத்தி வந்தனர். மேலும் வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய பணிக்கு அருகே உள்ள பகுதிக்கு செல்வோரும் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வந்தனர்.

    தற்போது அந்த பஸ் நிறுத்தம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் அதனை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மக்கள் அங்கு அமர முடியாமல் நீண்ட நேரம் கால் கடுக்க பஸ் வருகைக்காக காத்திருந்து பஸ் ஏறும் நிலைமை உள்ளது.

    மேலும் மழைக்காலத்தில் மழைநீர் பஸ் நிறுத்தம் முன்பு குளம் போல் தேங்கி விடுகிறது. அந்த சமயங்களில் அதன் முன்பு நிற்க கூட முடியாது. 30 அடி தூரம் தள்ளி நின்று பஸ் ஏறி வருகின்றனர். கடந்த 30 வருடங்களாக இந்த நிலைமையே காணப்படுகிறது.

    பாழடைந்த பஸ் நிறுத்தத்தை சீரமைத்து புதிதாக பஸ் நிறுத்தம் கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடமும், பேரூராட்சி தலைவரிடமும் பலமுறை கடிதம் கொடுத்துள்ளனர்.

    ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த பஸ் நிறுத்தம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×