search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டல் ஏரி"

    • ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சி கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது
    • கோடை விடுமுறை என்பதால் முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சி கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இவை வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற வாழப்பாடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரவீன்குமார் (வயது 18) என்பவர் அங்குள்ள நீரோடையில் குளித்தபோது உயிரிழந்தார். இதையடுத்து நீர்வீழ்ச்சி படி, வழிப்பாதை, சாலை பராமரிப்பு பணி ஆகியவைகளை மேற்கொள்வதற்காக ஆணைவாரி நீர்வீழ்ச்சி முட்டல் ஏரியை வனத்துறையினர் மூடினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முதல், முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில், ஏரியில் படகு சவாரி, பூங்கா திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், ஆணை வாரி நீர்வீழ்ச்சி பகுதியில், தண்ணீர் கொட்டும் இடத்தில் கைப்பிடி அமைத்தல், படிகள் சீரமைப்பு மற்றும் நீரோடை சீரமைப்பு, சாலை மண் அரிப்பு இடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர், என்று கூறினர்.

    • மோட்டார் படகு பழுதால் கடந்த 4 மாதமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.
    • கடந்த ஜூன் மாதம் புதுச்சேரியிலிருந்து ரூ.7 லட்சம் செலவில் மேற்கூரை வசதியுடன் கூடிய விசைப்படகு வாங்கப்பட்டது .

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வராயன் மலை அடிவாரத்தில் முட்டல் கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்ய ,வனப்பகுதியில் புள்ளிமான், காட்டெருமை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட விலங்கு, பறவைகளை பார்வையிட ஆனைவாரி நீர்வீழ்ச்சி ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர் .

    மோட்டார் படகு பழுதால் கடந்த 4 மாதமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் புதுச்சேரியிலிருந்து ரூ.7 லட்சம் செலவில் மேற்கூரை வசதியுடன் கூடிய விசைப்படகு வாங்கப்பட்டது . இதில் என்ஜின் பொருத்தப்பட்டு கடந்த 13-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது .

    அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக சென்று வருகின்றனர். ஏரியை ரசிக்க ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து செல்லும்படி விசைப்படகு இயக்கப்படுகிறது.

    கடந்த 13-ந் தேதி 225 பேர், 16-ந் தேதி 409 பேர் ,15-ந் தேதி 361 பேர், 16-ந் தேதி 123 பேர் ,17-ந் தேதியான நேற்று 110 பேர் என 5 நாளில் 1228 பேர் சவாரி சென்றுள்ளனர். பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.20 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இது தவிர ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் கனிசமான அளவில் தண்ணீர் வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    • ஆத்தூர் அருகே உள்ள முட்டல் ஏரியில் விசைப்படகு சவாரி விரைவில் தொடங்கவுள்ளது.
    • ஆைண வாரி நீர் வீழ்ச்சியை ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் கல்வராயன் மலை அடிவாரத்தில் முட்டல் கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்யவும், வனப் பகுதியில் புள்ளிமான், காட்டெருமை, காட்டுப் பன்றி, மயில் உள்ளிட்ட விலங்குகள், பறவைகளை பார்வையிடவும், ஆைண வாரி நீர் வீழ்ச்சியை ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    மூங்கில் குடில் விடுதிகள்

    மேலும் அங்கு தங்கி பார்வையிட, சூழல் சுற்றுலா திட்டத்தில் மூங்கில் குடில் கொண்ட விடுதிகள் உள்ளன. மோட்டார் படகு பழுதானதால் 3 மாதங்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவரி செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் படகை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் முட்டல் ஏரி அழகை ரசிக்க, ரூ. 7 லட்சம் ரூபாயில், ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் மேற்கூரை கொண்ட விசைப்படகு, புதுச்சேரியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.இந்த விசைப்படகு ஜுலை மாதத்தில் இயக்கப்பட உள்ளது.

    விசைப்படகில் என்ஜின் பொருத்தப்பட்டு அவை நிறுத்தப்படும் இடங்கள் தயார் செய்த பின் அதனை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் முட்டல் ஏரி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×