search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது பின் சையத் அல் நயான்"

    • காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு தொடங்குகிறது.
    • இந்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நாளை காலை தொடங்கி வைக்கிறார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடியை, கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், முதல் மந்திரி பூபேந்திர பட்டேல், மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் வரவேற்றனர்.

    இன்று காலை காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திருக்கு வந்த பிரதமர், அங்கு திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.

    இதற்கிடையே, நாளை காலை 9:45 மணியளவில் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பின், முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது உலகளாவிய உச்சி மாநாடு நாளை தொடங்கி 3 நாட்கள் காந்தி நகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்க உள்ளன.

    துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியில் உலகத் தரம்வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை நிறுவனங்கள் காட்சிப்படுத்துகின்றன. இ-மொபிலிட்டி, ஸ்டார்ட் அப்கள், எம்.எஸ்.எம்.இ.க்கள், நீல பொருளாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் ஸ்மார்ட் உள்கட்டமைப்பு ஆகியவை வர்த்தக கண்காட்சியில் கவனம் செலுத்தும் துறைகளாகும்.

    இந்நிலையில், துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயானை பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார். அவருடன் வாகன பேரணியிலும் பங்கேற்றார்.

    ×