search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vibrant Gujarat"

    • குஜராத்தின் காந்தி நகரில் துடிப்பான குஜராத் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • உலகம் இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாகப் பார்க்கிறது என்றார்.

    அகமதாபாத்:

    குஜராத்தின் காந்தி நகரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தன. இப்போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தனது இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் நேரத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம்.

    இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகள்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உச்சி மாநாட்டில் அவர் தலைமை விருந்தினராக கலந்துகொள்வது இந்தியாவிற்கும் யு.ஏ.இ.க்கும் இடையே இருக்கும் வலுவான உறவைக் குறிக்கிறது.

    உலகம் இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாகப் பார்க்கிறது. நம்பக்கூடிய ஒரு நண்பர், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு பங்குதாரர், உலகளாவிய நன்மையை நம்பும் ஒரு குரல், உலகப் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரம், தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப மையம், திறமையான இளைஞர்களின் சக்தி மற்றும் ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

    யு.ஏ.இ நிறுவனங்களால் இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 11-வது இடத்தில் இருந்தது.

    இன்று அனைத்து முக்கிய ஏஜென்சிகளும் வரும் ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அது நடக்குமென உத்தரவாதம் அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • உலகின் மிகவும் மதிப்பு மிக்க முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இதுவாகும்.
    • ரிலையன்ஸ் ஒரு குஜராத்தி நிறுவனமாக இருந்தது. எப்போதும் அது இருக்கும்.

    காந்திநகர்:

    குஜராத் தலைநகர் காந்தி நகரில் 10-வது சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு இன்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத், செக் குடியரசு பிரதமர் பீட்டர் பியாலா, மொசாம்பிக் அதிபர் பிலிப், குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ் வரத், முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:-

    உலகின் மிகவும் மதிப்பு மிக்க முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இதுவாகும். குஜராத் நவீன இந்தியாவின் வளர்ச்சியின் நுழைவு வாயிலாகும். வெளிநாட்டினர் புதிய இந்தியாவை நினைக்கும்போது அவர்கள் குஜராத்தை நினைக்கிறார்கள். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது.

    நமது காலத்தின் மிகப் பெரிய உலக தலைவராக உருவெடுத்த தலைவரால் இது முடிந்தது. இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

    ரிலையன்ஸ் ஒரு குஜராத்தி நிறுவனமாக இருந்தது. எப்போதும் அது இருக்கும். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் குஜராத்தில் ஜிகா தொழிற்சாலை தொடங்க தயாராக உள்ளோம்.

    2047-ல் குஜராத் மட்டும் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும். 2047-க்குள் இந்தியா 35 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த உச்சி மாநாட்டில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி பேசியதாவது:-

    குஜராத்தில் 2025 வரை ரூ.55 ஆயிரம் கோடியும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேலும் முதலீடு செய்யப்படும். இந்தியாவை ஒரு முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் பாதையில் செல்கிறது. பிரதமர் மோடி இந்தியா ஒரு பெரிய சக்தியாக உலக வரைப்படத்தில் வெற்றிகரமாக இணைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாடு தொடங்கியது.
    • இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை தொடங்கி வைத்தார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது வர்த்தக மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் காந்தி நகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்கின்றன.

    முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயான், செக் குடியசு நாட்டின் பிரதமர், திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    • காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு தொடங்குகிறது.
    • இந்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நாளை காலை தொடங்கி வைக்கிறார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடியை, கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், முதல் மந்திரி பூபேந்திர பட்டேல், மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் வரவேற்றனர்.

    இன்று காலை காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திருக்கு வந்த பிரதமர், அங்கு திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.

    இதற்கிடையே, நாளை காலை 9:45 மணியளவில் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பின், முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது உலகளாவிய உச்சி மாநாடு நாளை தொடங்கி 3 நாட்கள் காந்தி நகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்க உள்ளன.

    துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியில் உலகத் தரம்வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை நிறுவனங்கள் காட்சிப்படுத்துகின்றன. இ-மொபிலிட்டி, ஸ்டார்ட் அப்கள், எம்.எஸ்.எம்.இ.க்கள், நீல பொருளாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் ஸ்மார்ட் உள்கட்டமைப்பு ஆகியவை வர்த்தக கண்காட்சியில் கவனம் செலுத்தும் துறைகளாகும்.

    இந்நிலையில், துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயானை பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார். அவருடன் வாகன பேரணியிலும் பங்கேற்றார்.

    ×