search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் விலை அதிகரிப்பு"

    • மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.
    • கடந்த வாரத்தில் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1300-க்கு விற்பனை ஆனது.

    ராயபுரம்:

    காசிமேட்டில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் காசிமேட்டில் மீன்வாங்க கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து 61 நாட்கள் இது நடைமுறையில் இருக்கும். மீன்பிடி தடைகாலத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பி வரத்தொடங்கி விட்டனர்.

    விசைப்படகு மீனவர்கள் சுமார் ஒருவாரம் முதல் 15 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். எனவே குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்களே கடலுக்குள் சென்று உள்ளனர்.

    மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வரத் தொடங்கி உள்ளதால் விடுமுறை நாளான இன்று குறைந்த விசைப்படகுகளே திரும்பின. 80 முதல் 90 விசைப்படகுகள் மட்டுமே கரைக்கு திரும்பியதால் பெரிய வகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரவில்லை. இதனால் மீன்விலை அதிகரித்தது.

    வருகிற 15-ந்தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்கி விடும் என்பதால் விடுமுறை நாளான இன்று காசிமேட்டில் மீன் பிரியர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. எனினும் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களும் விலை அதிகமாக இருந்தது. வஞ்சிரம், கொடுவா, கானாங்கத்தை, நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் மட்டும் விற்பனைக்கு இருந்தது.

    கடந்த வாரத்தில் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1300-க்கு விற்பனை ஆனது. இதேபோல் ரூ.400-க்கு விற்பனை ஆன கொடுவா ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நண்டு-ரூ.450, இறால்-ரூ.500, நெத்திலி-ரூ.350, கானாங்கத்தை- ரூ.250-க்கு விற்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கிவிடும் என்பதால் மீன்விலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    • மீன்களின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்து விற்கப்பட்டது.
    • வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1300 முதல் ரூ.1400 வரை விற்பனை ஆனது.

    ராயபுரம்:

    காசிமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விடுமுறை நாளான இன்று கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான விசைப்படகுகள் கரை திரும்பவில்லை. இன்று காலை காசிமேடு துறைமுகத்துக்கு 150 முதல் 180 விசை படகுகள் மட்டுமே கரை திரும்பின.

    இதனால் பெரிய மீன்கள் வரத்து குறைந்தது. மேலும் மீன்களின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்து விற்கப்பட்டது. குறிப்பாக வஞ்சிரம், சங்கரா, வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலை அதிகமாக காணப்பட்டது.

    வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1300 முதல் ரூ.1400 வரை விற்பனை ஆனது. விலை அதிகம் என்றாலும் மீன்பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச் சென்றனர். பாறை, கொடுவா, சீலா போன்ற மீன்கள் வரத்து இல்லை.

    இன்று விடுமுறை நாள் என்பதால் காசிமேட்டுக்கு அதிகாலை 2 மணி முதலே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருந்தது. ஆனால் மீன் வரத்து குறைந்து விலை அதிகமாக இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    • ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன் வாங்க வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் அதிக அளவில் காசிமேட்டில் குவிந்தனர்.
    • கடந்த இரண்டு வாரங்களாக மீன்களின் விலை குறைவாக இருந்த நிலையில் தற்போது மீன்களின் விலை அதிகரித்து உள்ளது.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் இன்று கரை திரும்பின.

    இதனால் அதிக அளவு மீன்கள் விற்பனைக்கு குவிந்து இருந்தது. பெரிய வகை மீன்களும் அதிகம் காணப்பட்டது.

    இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன் வாங்க வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் அதிக அளவில் காசிமேட்டில் குவிந்தனர். இதனால் காசிமேடு மீன் விற்பனை கூடம் இன்று அதிகாலை முதல் களை கட்டியது.

    மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடந்த இரண்டு வாரங்களாக மீன்களின் விலை குறைவாக இருந்த நிலையில் தற்போது மீன்களின் விலை அதிகரித்து உள்ளது.

    வவ்வால், வஞ்சிரம், உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் விலை கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகமாக விற்பனையானது. கடந்த வாரம் ரூ.1100 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1,300 வரை விற்கப்படுகிறது.

    இதேபோல் சிறிய வகை சங்கரா, கொடுவா, பாறை போன்ற மீன்களும் ரூ.50 முதல் 100 வரை அதிகமாக காணப்பட்டது.

    ×