search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் விடுதலை"

    • ஆரோக்கியராஜூக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
    • விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 11-ந்தேதி காலை 7 மணியளவில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் 172 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இதில் ஆரோக்கியராஜ் (வயது 54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் அசோக் (28), கருப்பு (22), சக்தி (20) ஆகிய 4 பேரும் சென்றிருந்தனர்.

    அவர்கள் அன்று நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவை அடுத்த அனலைத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அந்த படகில் இருந்து விரித்திருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    மேலும் ஆரோக்கியராஜூக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கைதான 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மீண்டும் இதேபோல் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

    இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
    • மீனவர்கள் அனைவரும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆலந்தூர்:

    புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேர் கடந்த நவம்பர் மாதம் தமிழக கடலோரப் பகுதிகளில் மீன் பிடித்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 24 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று காலை அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழக அரசின் சார்பில்,மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் அனைவரும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்து இலங்கை காங்கேயன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
    • விடுதலையான மீனவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் அருகே கீழகாசாக்குடிமேடு பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கீழகாசாக்கடிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்பட 12 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

    கடந்த 6-ந் தேதி இவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது தட்பவெட்ப நிலை காரணமாக படகு முல்லை தீவு பகுதியில் ஒதுங்கியது. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் படகுடன் கைது செய்தனர்.

    இவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்து இலங்கை காங்கேயன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள கோர்ட்டு உத்தரவுபடி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதுபற்றி புதுவை மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையின் பேரில் காரைக்கால் மீனவர்கள் 12 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

    • கடந்த 7-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
    • மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, படகு உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அந்த 12 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கான நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து 12 மீனவர்களும் இலங்கை திரிகோண மலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, படகு உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

    • மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது.
    • வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து கடந்த 4-ந்தேதி 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 26 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மகேந்திரன், மதன், வசந்த், மெல்வின், சத்தியராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் 11-ந்தேதி மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக் (24), தேவராஜ் (35), சுரேஷ் (47), திருமேனி (31), வேல்முருகன் (29), சுந்தரம் (47) ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவார கால இடைவெளியில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டது சக மீனவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்து மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிலையற்ற அரசு நீடிக்கிறது. வன்முறை, போராட்டம் என கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையே இருந்து வருகிறது.

    இந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் மீதான வழக்கு இன்று இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 11 மீனவர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி நெடுந்தீவு அருகே கைதான புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரும் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை மீனவர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

    • வேதாரண்யம் பகுதியில் தென்கிழக்கில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • விடுதலையான தமிழகம் மற்றும் புதுவை மாநில மீனவர்கள் 12 பேரும் இன்று மாலை அல்லது நாளை அங்கிருந்து சென்னை துறைமுகத்துக்கு வர உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேட்டை சேர்ந்த கணேசன் (வயது 52), வைத்தியநாதன் , ராமன் உள்ளிட்ட 5 பேரும், மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரா (27), தினேஷ் (26), தரங்கம்பாடியை சேர்ந்த ராமநாதன் (44), விக்னேஷ் (22), ஜெகதீஸ் , சந்தீஸ்குமார், பாக்கியராஜ் ஆகிய 12 மீனவர்களுக்கு ஒரே படகில் கடந்த 1-ஆம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் வேதாரண்யம் பகுதியில் தென்கிழக்கில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்தனர்.

    மேலும் மீனவர்களின் படகு மற்றும் மீன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தினர். கட்சி தலைவர்களும் உடனடியாக தமிழக மீனவர்களை விடுதறை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இன்று மதியம் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தனர்.

    இதையடுத்து விடுதலையான தமிழகம் மற்றும் புதுவை மாநில மீனவர்கள் 12 பேரும் இன்று மாலை அல்லது நாளை அங்கிருந்து சென்னை துறைமுகத்துக்கு வர உள்ளனர். அதன் பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு செல்வர்.

    மீனவர்கள் விடுதலையானதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×