என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 24 மீனவர்கள் சென்னை திரும்பினர்
BySuresh K Jangir23 Dec 2022 9:02 AM GMT
- மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
- மீனவர்கள் அனைவரும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆலந்தூர்:
புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேர் கடந்த நவம்பர் மாதம் தமிழக கடலோரப் பகுதிகளில் மீன் பிடித்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 24 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று காலை அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழக அரசின் சார்பில்,மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் அனைவரும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X