search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் விபத்துக்கள்"

    • வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
    • ஈரக்கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது.

    உடுமலை: 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் தென்பட்டால், பொதுமக்கள் அருகில் செல்லக்கூடாது. மின் கம்பி தண்ணீரில் கிடந்தால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். மேலும் இதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் சாதனங்கள் மழை நீரில் மூழ்கினால், உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். ஈரக்கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது. மின்னல் மற்றும் இடியின் போது டி.வி., கம்ப்யூட்டர், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. இடி, மின்னலின் போது மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோகக்கம்பி வேலிகள், திறந்த நிலையிலுள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்ககூடாது. சார்ட் சர்க்யூட் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இயக்கும் போது உலர்ந்த, ரப்பர் பாய்களின் மீது நிற்க வேண்டும். துணிகளை உலர வைக்க மின் இழுவை கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை தாங்கிகளாக பயன்படுத்த கூடாது. மேலும் மின் விபத்துக்கள் குறித்து 'மின்னகம்' 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமே செய்ய வேண்டும்.
    • தீ விபத்து ஏற்பட்டால் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மரியா ஆரோக்கியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை பயன்படுத்துங்கள்.

    ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்றவைகளுக்கு 3 பின் சாக்கெட் பிளக்குகளை பயன்படுத்துங்கள்.

    மின் கசிவு தடுப்பானை இல்லங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் பயன்படுத்துங்கள். உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனே மாற்றுங்கள். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

    5 ஆண்டுக்கு ஒரு முறை வயரிங்குகளை சோதனை செய்து மாற்றுங்கள். மின் கம்பங்கள், அவற்றின் ஸ்டே வயர்கள் மீது அல்லது மின் கம்பத்தின் மீதும் கொடி கயிறு கட்டி துணிகளை உலர்த்த கூடாது. குளியலறை, கழிப்பறை போன்ற ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது.

    மின் கம்பங்கள், ஸ்டே கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களை பந்தலாகவும், விளம்பர பலகை கட்டவும் பயன்படுத்தக்கூடாது.

    மழை, பெருங்காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல கூடாது. உடனே மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மின் கம்பிகள் அருகே செல்லும் மரக்கிளைகளை மின்வாரிய அலுவலர்கள் உதவியுடன் அகற்ற வேண்டும். அவசர நேரத்தில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும்படி மின் கருவிகளின் சுவிட்சுகளை அமைக்க வேண்டும்.

    மின்சார தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பான்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

    இடி, மின்னலின் போது வெளியே இருக்காதீர்கள். கான்கிரீட், கூரை வீடுகளின் கீழ் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையலாம். குடிசை, மரங்களின் கீழ் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கக்கூடாது. மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.

    மேலும் மின் புகார்களை மின்னகம் எண்: 94987 94987, வாட்ஸ் அப் எண்: 94458 51912 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×