search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாஸ்கே துப்பாக்கிச்சூடு"

    • முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.
    • இந்த கடினமான நேரத்தில் ரஷிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இந்தியா உறுதுணை நிற்கிறது என கூறியுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் மர்மநபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.

    தாக்குதல் நடத்தியவர்கள் யார்? பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா? என போலீஸ், புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த கடினமான நேரத்தில் ரஷிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இந்தியா உறுதுணை நிற்கிறது என கூறியுள்ளார்.

    ×