search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்று கட்சியினர்"

    • கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்தது
    • தி.மு.க.மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால் தலைமையில் இனையம் புத்தன்துறை ஊராட்சி கவுன்சிலர் தேவதாஸ் உட்பட மாற்றுக் கட்சியினை சேர்ந்த சம்பத், ரஞ்சித் சிங், சஜன், பிரதீஷ், சுஜின், அகில் மற்றும் கீழ்குளம் பேரூராட்சி 1-வது வார்டு சேம்பிளஞ்சி விளை பகுதியை சேர்ந்த சதீஷ் உட்பட பலர் அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோ தங்கராஜ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் துரை ராஜ், மத்திக்கோடு ஊராட்சி துணை தலைவர் ஜெனோ ரெனிட்டஸ், குறும்பனை பகுதியை சேர்ந்த ஜீன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சபின் உட்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க.வில் இணைத்து கொண்ட வாலிபர்கள் இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சரும் தி.மு.க.மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    • சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    ஆளும் தி.மு.க. எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை, உணவு பொருட்களின் விலை உயர்வடைந்து உள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்தான் நாட்டை ஆள வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலங்க ளில் மக்களை பாதிக்காத வகையில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மக்கள் கஷ்டப்படும் நிலைமையை மாற்ற நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆளும் இயக்கமாக இருக்க வேண்டிய நாம் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஆட்சியை இழந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றி தரு வோம். மாற்று கட்சியினரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்பதால் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அனைவரையும் வர வேற்போம். மதிப்பளிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி மாநகராட்சி பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமி நாராயணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×