search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான்வேட்டை வழக்கு"

    மான்வேட்டை வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட நட்சத்திரங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. #BlackBuckPoachingCase #SonaliBendre
    அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட்டில் 1998ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.



    கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், நடிகை சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி, தபு, நடிகர் சயீப் அலிகான் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் கீழ்கோர்ட்டில் விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #BlackBuckPoachingCase #SonaliBendre
    மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என ஜோத்பூர் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. #SalmanKhan #BlackbuckPoachingCase
    ஜெய்ப்பூர்:

    பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்கானி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார்.

    அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.

    இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.

    தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.

    இதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. பின்னர், சிறையில் இருந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் கோர்ட் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என நிபந்தனை விதித்தது.

    இதற்கிடையே, படப்பிடிப்புகளில் பங்கேற்க உள்ளதால் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் எனக்கோரி சல்மான் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சல்மான் கான் ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது கோர்ட் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என உத்தரவிட்டார். #SalmanKhan #BlackbuckPoachingCase
    ×