search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trouble Again"

    மான்வேட்டை வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட நட்சத்திரங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. #BlackBuckPoachingCase #SonaliBendre
    அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட்டில் 1998ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.



    கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், நடிகை சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி, தபு, நடிகர் சயீப் அலிகான் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் கீழ்கோர்ட்டில் விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #BlackBuckPoachingCase #SonaliBendre
    ×