search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் தவிப்பு"

    • அபிராமம் சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி இல்லை.
    • சலுகைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 125-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கூலி வேலை செய்து பிழைத்து வரு கின்றனர். இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயர்நிலை, மேல்நிலை படிக்க அரசுப்பள்ளி கிடையாது.

    அபிராமத்தில் 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதுவும் முறையாக செயல்படுவதில்லை. மேலும் 2 தனியார் பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் அரசின் சலுகைகள் இன்று வரை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-

    அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

    இவர்களது பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்க்கு குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைபள்ளியில் படிக்க அரசு பள்ளி கிடையாது. 8-வது வரை மட்டுமே படிக்க அரசு பள்ளி உள்ளது. தமிழக அரசின் சலுகைகளான மருத்துவம், பொறியல் படிப்பவர்களுக்கு 7.5 சதவீத மாணவ- மாணவிகள் படிக்க அரசே முழு செலவையும் ஏற்கும் என்ற திட்டம், கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவை அபிராமம் அதனை சுற்றியுள்ள மாணவர்களுக்கு கிடைக்க வாய்பில்லை.

    இந்த சலுகைகளை பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்குதான் கிடைக்கும் என்ற நிலை நிலை உள்ளது. எனவே இனிவரும் காலங்களிலாவது அபிராமம் பகுதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மூலகாரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளி தொடங்க கலெக்டரும், பள்ளி கல்வி துறையினரும் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் மருத்துவ உள் ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • தங்களுடைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 70அரசு பள்ளிகள் உட்பட 119மேல்நிலைப்பள்ளிகள் இருப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகராட்சியில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமே உள்ளன.

    ராமநாதபுரத்தில் அரசு இருபாலர் பள்ளியோ அல்லது ஆண்கள் மேல் நிலைப்பள்ளியோ கிடையாது என்பதால் வேறு வழியின்றி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி யிலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகராட் சிக்குட்பட்ட பகுதியில் இருபாலர் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கை அரசால் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.

    ஒருவேளை இருபாலார் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி நகரில் அமையும் பட்சத்தில் தங்களுடைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றனர்.

    இந்த சூழலில் மருத்துவ கனவு மேலும் ஒரு தலைவலியாக மாறியுள்ளது. மாவட்ட தலைநகரில் வசித்து வரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிரத்தை எடுத்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு அறிவித்துள்ள மருத்துவ உள் இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.

    6முதல் 12-ம்வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே 7.5சதவீத உள் இட ஒதுக்கீடு என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை படிக்க வைத்தும் உள் ஒதுக்கீடு பெற முடியவில்லையே? என்று பல பெற்றோர்கள் வேதனையில் உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பாலமுத்துவிடம் கேட்ட போது, ராமநாதபுரம் மாவட்ட தலைநகரில் அரசு பள்ளி இல்லை என்பதற்கு காரணம் இடம் இல்லை என்று தெரிவித்தார்.

    தற்போது அரசு அறி வித்துள்ள மருத்துவ உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப் பிக்க வேண்டு மெனில் அரசு பள்ளியில் மட்டுமே படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் அரசுமேல்நிலைப்பள்ளியே இல்லாமல் இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தட்சி ணாமூர்த்தி கூறுகையில், வாலிபர் சங்கமும், மாணவர் சங்கமும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வா கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு பள்ளி அமைப்பதற்கு உண்டான இடவசதி இல்லை எனக்கூறி வரு கின்றனர்.ஆனால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ளேயே தனியார் பள்ளி இயங்குவதற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் கூறுகையில், கூலித்தொழிலாளியான எனது மகள் ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்து தற்போது கல்லூரியில் பயின்று வருகிறார். என்னுடைய மகள் படிப்பதற்கு அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத தால் 10-ம் வகுப்பு படித்து முடித்த அவரை எங்கு சேர்ப்பது? என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளேன் என்றார்.

    • 20 எண் கொண்ட நகரப் பேருந்து சரி வர இயக்கப்படவில்லை.
    • தனியார் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து தினந்தோறும் நகர மற்றும் புறநகர் பேருந்துகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    நகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் வேலைக்காக பயணித்து வருகின்றனர்.

    பாலக்கோட்டிலிருந்து வெள்ளிச்சந்தை, அனுமந்தபுரம், காரிமங்கலம், திப்பம்பட்டி கூட்ரோடு வரை இயக்கப்படும் 20 எண் கொண்ட நகரப் பேருந்து சரி வர இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இவ்வழியாக நாள் ஒன்றுக்கு 3 முறை இயக்கப்படும் நகர பேருந்து ஒருமுறை மட்டுமே இயக்கப்படுவதால் அவ்வழியே செல்லும் அரசு, தனியார் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    திப்பம்பட்டி கூட்டுரோடு முதல் காரிமங்கலம், அனுமந்தபுரம், வெள்ளிச்சந்தை வழியாக பாலக்கோட்டிற்கு இரவு நேரத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பெரும்பாலும் 20 எண் கொண்ட நகரப் பேருந்தை நம்பி ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.

    மேலும் பேருந்துகள் முறையாக இயக்கப்படாமல் உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு முறையாக பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல்லில் இருந்து ஜம்புளியம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிபட்டி, வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை வழியாக மணியகாரன்பட்டிக்கு காலை 7 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
    • கடந்த ஒரு மாதமாக பஸ் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் கட்டணம் செலுத்தி திண்டுக்கல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லில் இருந்து ஜம்புளியம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிபட்டி, வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை வழியாக மணியகாரன்பட்டிக்கு காலை 7 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதேபஸ் மாலை 5 மணிக்கு இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். இதன்மூலம் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், மாலையில் வீட்டிற்கு திரும்பவும் சிரமம் இன்றி பயணித்து வந்தனர்.

    கடந்த ஒரு மாதமாக இந்த பஸ் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டது. வி.டி.பட்டியில் ஆரம்பபள்ளி மட்டுமே உள்ளது. சிலுவத்தூரில் உயர்நிலைப்பள்ளியும், கம்பிளியம்பட்டியில் மேல்நிலைபள்ளியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளிக்கு வருவதற்கு மாணவர்கள் இந்த அரசு பஸ்சையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பஸ் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் கட்டணம் செலுத்தி திண்டுக்கல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்டோவில் கட்டணம் செலுத்தி பயணம் செய்யமுடியாத பல மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர்.

    இதனால் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு வழக்கம்போல் இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கவேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×