search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைவாழ் குழந்தைகள்"

    • உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
    • கிராமத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்குள்ள வீடுகளிலும், திறந்தவெளியில் மரத்தடியில், அமர்ந்து படித்து வருகின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம்உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.அடர் வனத்தில் வசிக்கும் அப்பகுதி மக்கள், அடிப்படை வசதி மற்றும் தங்களின் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உடுமலை வனச்சரகம்குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் சமீபத்தில் மழைக்கு இடிந்து விழுந்தது.இதே போல் குருமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு இடிந்து பல ஆண்டுகளாகிறது.

    இதுவரை கட்டிடத்தை புதுப்பிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கிராமத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்குள்ள வீடுகளிலும், திறந்தவெளியில் மரத்தடியில், அமர்ந்து படித்து வருகின்றனர். பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை சமவெளியிலுள்ள உண்டு, உறைவிட பள்ளிகளில் சேர்த்துள்ளனர். ஆனால் அப்பள்ளிகளின் சூழலுக்கு பொருந்தாமல், மாணவர்கள் அங்கிருந்து மீண்டும் தங்கள் கிராமத்துக்கே திரும்ப வந்து விடுகின்றனர்.

    இது குறித்து மலைவாழ் கிராம மக்கள் கூறியதாவது:- எங்கள் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறவே மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு மலை கிராமங்களில், பள்ளிகள் துவக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் பள்ளி கட்டிடங்கள் இடிந்துஅனைத்து பள்ளிகளும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது தற்காலிமாக வகுப்புகள் நடந்து வருகிறது.பல தலைமுறைகளாக கல்விக்காக போராடும் எங்கள் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க தொடர்ந்து மனு அனுப்பி வருகிறோம் என்றார்.

    மலை கிராம பள்ளிகளில் பணியாற்ற நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, அங்கு தங்குவதற்கு எவ்வித வசதியும் இல்லை. நாள்தோறும் சமவெளிப்பகுதியில் இருந்து பயணித்து பள்ளிக்கு செல்வதும் சாத்தியமில்லை.எனவே, பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்கும் போது, ஆசிரியர்களுக்கான தங்கும் அறை, கழிப்பிடம் கட்டித்தர வேண்டும். இல்லாவிட்டால், ஆசிரியர்கள், மலை கிராம பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக செல்வது கேள்விக்குறியாகி, கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படும். அப்பகுதி மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.  

    • கடந்த 20 ஆண்டுக்கு முன் ஆரம்ப பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
    • குளிப்பட்டி பள்ளிக்கூடம் கொரோனாவுக்கு பின் திறக்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் மாவடப்பு,ஈசல்திட்டு,குருமலை,குளிப்பட்டி உள்ளிட்ட 15 மேற்பட்ட வனக்குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள குளிப்பாட்டி வனக் குடியிருப்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்விக்காக கடந்த 20 ஆண்டுக்கு முன் ஆரம்ப பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. வருடங்கள் பல ஆனதால் பள்ளிக்கட்டிடம் வலுவிழந்து வகுப்பறையின்‌ உள்ளே கான்கிரீட் பெயர்ந்து விழுந்து,கட்டிடம் முழுமையாக இடியும் நிலையில் இருந்தது.

    மேலும் சில இடங்களில் மேற்கூரை வலுவிழந்தும், சுவரில் விரிசல் ஏற்பட்டும் காணப்பட்டதால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆசிரியர்களும் பெற்றோரும் அருகில் உள்ள மலைவாழ் மக்கள் வீடு ஒன்றின் முன்பாக செட் அமைத்து அங்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இரு ஆசிரியர்கள் இங்கு பணிபுரிந்து வரும் நிலையில்,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைத்து தங்கள் குழந்தைகளின் கல்வியை காக்க முன் வர வேண்டும் என குளிப்பட்டி மலைவாழ் மக்கள் அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குளிப்பட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.அப்போது ஏற்கனவே வலுவிழந்து காணப்பட்ட பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.அப்போது அங்கு பள்ளிக் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

    இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், குளிப்பட்டி பள்ளிக்கூடம் கொரோனாவுக்கு பின் திறக்கப்பட்டது முதல் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் குளிப்பட்டி கிராமம் இராவணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாகும். வலுவிழந்து உள்ள பள்ளிக் கட்டிடத்துக்கு பதில் புதிய கட்டிடம் வேண்டி பல முறை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்திபோது மழையில் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.மொத்த கட்டிடமும் வழுவிழந்து காணப்படுவதால் இதனை முழுமையாக அகற்றி புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்து மலைவாழ் குழந்தைகளின் கல்வியை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×