search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ கல்வி கட்டணம்"

    • அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

    பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை, கியாஸ் மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை என புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதன்படி புதுவையில் அரசு மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 370 அரசு இடங்களில் 37 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வசதி இல்லாதவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

    எனவே மருத்துவக்கல்விக்கு தேர்வாகும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

    இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அரசு பள்ளி மாணவர்ளுக்கு இலவச மருத்துவ கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் கல்வி கட்டணம் செலுத்த சிரமப்படுகின்றனர்.

    எனவே முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். பெற்றோர்களும் தங்களின் சிரமத்தை தெரிவித்தனர்.

    இதையேற்று அரசு பள்ளி மாணவர்கள் உள் ஒதுக்கீட்டில் மருத்துவ கல்வி படிக்க இடம் பெறும் மாணவர்களுக்கு கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் முழுவதையும் புதுவை அரசே செலுத்தும். தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் கேட்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×