search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ கல்லூரியில் சேர்க்கை"

    • அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது.
    • ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 26 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றனர்.

    ஈரோடு:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ். (மருத்துவம்) மற்றும் பி.டி.எஸ் (பல் மருத்துவம்) போன்ற படிப்பிற்கு நீட் தேர்வு தேர்ச்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடந்து வருகிறது.

    இந்த நீட் தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளி களில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரம் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலில் அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 6 மாணவர்கள், 15 மாணவிகள் என 21 பேர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். பட்டம் படிக்க மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றனர்.

    இதேப்போல 4 மாணவிகள் உள்பட 5 பேரும் பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ் பட்டம் படிக்க சேர்க்கை பெற்றுள்ளனர்.

    இதில் ஒருவர் மட்டும் முதல் முறையாக நீட் தேர்வு எழுதி 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்.

    மீதமுள்ள 25 பேரும் 2-ம் முறை நீட் தேர்வு எழுதி அரசின் இட ஒதுக்கீடு பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றுள்ளதை மாவட்ட கல்வித்துறையினர் உறுதி செய்தனர்.

    • மோகனூர் சாலையில் லத்துவாடி கிராமத்தில் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வரு கிறது.
    • நாமக்கல் முன்னாள் கலெக்டரான சகாயம் மேற்பார்வையில் இந்த இல்லம் இயங்கி வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மோகனூர் சாலையில் லத்துவாடி கிராமத்தில் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் முன்னாள் கலெக்டரான சகாயம் மேற்பார்வையில் இந்த இல்லம் இயங்கி வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மாணவ, மாண விகள் தங்கி உள்ளனர்.

    கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோரை இழந்த மாணவி சரண்யா, இந்த இல்லத்தில் வந்து சேர்ந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை படித்தார். நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்விலும் மாணவி சரண்யா பங்கேற்று, 250 மதிப்பெண்களை பெற்றார்.

    இதை அடுத்து நடந்த மருத்துவ கலந்தாய்வில் சென்னையில் உள்ள ராகாஷ் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற வாய்ப்பு கிடைத்தது. நேற்று கல்லூரியில் சேர்ந்து தனது முதலாம் ஆண்டு வகுப்பை மாணவி தொடங்கி உள்ளார். அந்த மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    ×