search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admitted to medical college"

    • அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது.
    • ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 26 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றனர்.

    ஈரோடு:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ். (மருத்துவம்) மற்றும் பி.டி.எஸ் (பல் மருத்துவம்) போன்ற படிப்பிற்கு நீட் தேர்வு தேர்ச்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடந்து வருகிறது.

    இந்த நீட் தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளி களில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரம் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலில் அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 6 மாணவர்கள், 15 மாணவிகள் என 21 பேர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். பட்டம் படிக்க மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றனர்.

    இதேப்போல 4 மாணவிகள் உள்பட 5 பேரும் பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ் பட்டம் படிக்க சேர்க்கை பெற்றுள்ளனர்.

    இதில் ஒருவர் மட்டும் முதல் முறையாக நீட் தேர்வு எழுதி 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்.

    மீதமுள்ள 25 பேரும் 2-ம் முறை நீட் தேர்வு எழுதி அரசின் இட ஒதுக்கீடு பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றுள்ளதை மாவட்ட கல்வித்துறையினர் உறுதி செய்தனர்.

    ×