search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ கல்லூரி மாணவர்"

    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மாணவர் மீது 4 மாணவர்கள் விழுந்து விளையாடியதில் சுய நினைவை இழந்தார்.
    • 4 மாணவர்களை 3 மாதத்திற்கு சஸ்பெண்டு செய்து டீன் உத்தரவிட்டுள்ளார்.

    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள்.

    கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இந்த கல்லூரியில் சென்னையை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் சபீக் அகமது என்பவர் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று படித்து வருகிறார். மாணவருக்கு கடந்த 10-ந் தேதி பிறந்த நாளாகும்.

    இவரது பிறந்தநாளை சக மாணவர்கள் விடுதி வளாகத்தில் கொண்டாடினார்கள். அந்த நேரம் மாணவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சபீக் அகமதுவை தூக்கியும் விளையாடினார்கள். அந்த நேரம் கீழே விழுந்த சபீக் அகமது மீது மற்ற மாணவர்கள் ஒருவர் மாறி மற்றொருவர் விழுந்தார்கள்.

    அந்த நேரம் சபீக் அகமதுவின் கழுத்து பகுதியில் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு பகுதி துண்டிக்கப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். நீண்ட நேரமாக அவர் எழுந்திருக்காததால் பதறிபோன சக மாணவர்கள் இது குறித்து விடுதி பொறுப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவரை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    மாணவருக்கு கழுத்து பகுதியில் செல்லக்கூடிய நரம்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுய நினைவை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுய நினைவுக்கு அவர் வரவில்லை. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

    இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 மருத்துவ கல்லூரி மாணவர்களை 3 மாதத்திற்கு சஸ்பெண்டு செய்து, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

    மாணவர்களிடையே ராகிங், ஈவ்டீசிங் போன்றவை இருக்க கூடாது என்று ஒவ்வொரு கல்லூரி நிர்வாகத்தினரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில பஸ் டே என்ற பெயரில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், மருத்துவ மாணவர் கழுத்து பகுதியில் சக மாணவர்கள் விழுந்து விளையாடியதில், நரம்பு துண்டிக்கப்பட்டு மாணவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
    • சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூரை சேர்ந்தவர் பால செல்வகுமார் (வயது 25). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரெயிலில் சிதம்பரத்தி லிருந்து மயிலாடுதுறை செல்ல டிக்கெட் எடுத்துக்கொண்டு, நடைமேடையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை செல்லும் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. அதில் பாலசெல்வகுமார் ஏறினார்.ரெயில் விழுப்புரம் மார்க்கம் செல்வதாக தெரிந்த பிறகு வண்டியில் இருந்து கீழே இறங்கிய போது தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவரது கால் துண்டானதுடன் தலையிலும் அடிபட்டது.படுகாயம் அடைந்த மருத்துவ கல்லூரி மாணவர் பால செல்வகுமாரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். துண்டான காலும் பதப்படுத்தப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது.

    • வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு வழியில் ஆத்தி விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள வனப் பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.

    இதை கண்ட அப்பகுதி தொழிலாளர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த வாலிபரின் அருகே செல்போன் ஒன்று இருந்துள்ளது. ஆனால் அது சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் அதை கைப்பற்றி சார்ஜ் செய்து அதில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் பண்ருட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (19) என்பதும், அவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வந்ததும் தெரிய வந்தது. ஆனால் அவர் எப்படி சென்னிமலைக்கு வந்தார். எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வில்லை.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×