search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical College student"

    • சங்க ஆயுள்கால உறுப்பினர்கள், சமுதாய வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர்.
    • கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை தட்சண மாற நாடார் சங்கத்தின் 58-வது மகாசபை கூட்டம் தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் உள்ள டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் கூட்ட அரங்கில் சங்கத் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை யில் நடைபெற்றது. சங்க மூத்த நிர்வாகசபை இயக்குநர் பி.எஸ். கனிராஜ் நாடார் வரவேற்றார்.

    58-வது மகாசபை கூட்டம்

    58-வது மகாசபை கூட்டத்தின் ஆண்டறிக்கையை சங்கச் செயலாளர் டி.ராஜகுமார் நாடார் வாசித்தார். ஆண்டறிக்கையில் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் கல்வி ஸ்தாபனங்களின் வளர்ச்சி பணிகள் 2022 - 2023-ம் வருடத்தில் சங்கம் நிகழ்த்திய சாதனை விபரங்கள் மற்றும் சங்கத்தின் செயல்பாடு கள் குறித்து விபரங்கள் வாசித்து சமர்ப்பித்தனர்.

    அதைத்தொடர்ந்து 2022-2023-ம் வருடத்திற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்குகளை சங்கப் பொருளாளர் ஏ. செல்வராஜ் நாடார் வாசித்து விளக்கம் அளித்தார். பின்னர் கூட்டத்தில் மகாசபை கூட்ட ஆய்வுக்கான பொருட்கள் ஆய்வுக்கு விடப்பட்டு மகாசபை உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    சங்க ஆயுள்கால உறுப்பினர்கள், சமுதாய வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர். புங்கம்பட்டியை சேர்ந்த மாடசாமி என்ற ஆயுள்கால உறுப்பினர் போலீஸ் நிலையங்களில் நாடார் சமுதாய இளைஞர்கள் மீது எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அதிக அளவில் வழக்குப்பதிவு செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    2 ஆயிரம் பேர் பங்கேற்பு

    கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்த தூத்துக்குடியை சேர்ந்த மாணவிக்கு கல்லூயில் 3 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமான கல்லூரி மற்றும் பேராசிரி யர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அரசை கேட்டு க்கொள்ளப்பட்டது.

    கூட்டத்தில் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் காரியக்கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சப்-கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மும்பை கிளைச்சங்க சேர்மன் எம்.எஸ். காசிலிங்கம் நாடார், செயலாளர் டபிள்யூ. மைக்கிள் ஜார்ஜ் நாடார், சென்னை கிளை செயலாளர் எஸ். ராஜேந்திரன் நாடார், பொருளாளர் எம். ஜெகதீசன் நாடார் மற்றும் சங்க ஆயுள் கால உறுப்பினர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நெல்லை தட்சண மாற நாடார் சங்க துணைச் செயலாளர் வி.பி. ராமநாதன் நாடார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை காரியக்கமிட்டி உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார் தொகுத்து வழங்கினார்.

    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மாணவர் மீது 4 மாணவர்கள் விழுந்து விளையாடியதில் சுய நினைவை இழந்தார்.
    • 4 மாணவர்களை 3 மாதத்திற்கு சஸ்பெண்டு செய்து டீன் உத்தரவிட்டுள்ளார்.

    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள்.

    கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இந்த கல்லூரியில் சென்னையை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் சபீக் அகமது என்பவர் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று படித்து வருகிறார். மாணவருக்கு கடந்த 10-ந் தேதி பிறந்த நாளாகும்.

    இவரது பிறந்தநாளை சக மாணவர்கள் விடுதி வளாகத்தில் கொண்டாடினார்கள். அந்த நேரம் மாணவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சபீக் அகமதுவை தூக்கியும் விளையாடினார்கள். அந்த நேரம் கீழே விழுந்த சபீக் அகமது மீது மற்ற மாணவர்கள் ஒருவர் மாறி மற்றொருவர் விழுந்தார்கள்.

    அந்த நேரம் சபீக் அகமதுவின் கழுத்து பகுதியில் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு பகுதி துண்டிக்கப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். நீண்ட நேரமாக அவர் எழுந்திருக்காததால் பதறிபோன சக மாணவர்கள் இது குறித்து விடுதி பொறுப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவரை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    மாணவருக்கு கழுத்து பகுதியில் செல்லக்கூடிய நரம்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுய நினைவை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுய நினைவுக்கு அவர் வரவில்லை. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

    இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 மருத்துவ கல்லூரி மாணவர்களை 3 மாதத்திற்கு சஸ்பெண்டு செய்து, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

    மாணவர்களிடையே ராகிங், ஈவ்டீசிங் போன்றவை இருக்க கூடாது என்று ஒவ்வொரு கல்லூரி நிர்வாகத்தினரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில பஸ் டே என்ற பெயரில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், மருத்துவ மாணவர் கழுத்து பகுதியில் சக மாணவர்கள் விழுந்து விளையாடியதில், நரம்பு துண்டிக்கப்பட்டு மாணவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
    • சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூரை சேர்ந்தவர் பால செல்வகுமார் (வயது 25). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரெயிலில் சிதம்பரத்தி லிருந்து மயிலாடுதுறை செல்ல டிக்கெட் எடுத்துக்கொண்டு, நடைமேடையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை செல்லும் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. அதில் பாலசெல்வகுமார் ஏறினார்.ரெயில் விழுப்புரம் மார்க்கம் செல்வதாக தெரிந்த பிறகு வண்டியில் இருந்து கீழே இறங்கிய போது தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவரது கால் துண்டானதுடன் தலையிலும் அடிபட்டது.படுகாயம் அடைந்த மருத்துவ கல்லூரி மாணவர் பால செல்வகுமாரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். துண்டான காலும் பதப்படுத்தப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது.

    ×